பள்ளி கட்டிட சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய துணைத் தலைவர் மீது புகார்

பள்ளி கட்டிட சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய துணைத் தலைவர் மீது புகார்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சா.மா. சேட்டு மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில் மனு அளித்தார் அந்த மனுவில் கூறியிருப்பதாவது

ஆற்காடு ஊராட்சி ஒன்றியம், சாத்தூர் ஊராட்சிமன்ற  தலைவராக
கடந்த 9 மாதமாக மக்கள் பணியாற்றி வருகிறேன். தொடர்ந்து எங்கள் பகுதியில்
மக்களுக்கு அடிப்படை வசதிகள் தடையின்றி கிடைக்க வழிவகை செய்ய
பணியாற்றி வருகிறேன். 

சாத்தூர் ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் துணைத்தலைவராக
 கே.இளங்கோவன் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆரம்பத்தில் இருந்து
அவர் எனக்கும், மன்ற நிர்வாகத்திற்கும் ஒத்துழைப்பு தராமல் என்னையும்
புறக்கணிக்கின்ற வகையில் மரியாதை இல்லாமல் தகாத வார்த்தைகளால் பேசி
வருகிறார். 

ஒருசில வார்டுகளில் குழாய் பைப்லைன் பெஸ்ட் போன்ற வேலைகளை
அவரே எனக்குத் தெரியாமல் செய்துவிட்டு என்னிடத்தில் அதற்கு பில் பணம்
தரும்படி கேட்கிறார்.
இதுசம்மந்தமாக ஆற்காடு வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடத்தில்
நான் கடிதம் கொடுத்துள்ளேன்.

 நான் செய்கின்ற செலவினங்களுக்கு அவர்
பிஎம்எஸ்-ல் கையெழுத்து போட மறுக்கிறார் மேலும் சாத்தூர் ஊராட்சியில் உள்ள
பெரிய ஏரியில் பொதுப்பணித்துறை மூலமாக விடப்பட்ட மீன் ஏலத்தினை அவரது
பெயரில் குறைந்த தொகைக்கு எடுத்து அதிக தொகைக்கு வேறு ஒரு நபருக்கு
கொடுத்து பணம் சம்பாதிக்கிறார்.

 சட்டப்படி ஊராட்சிமன்ற துணைத்தலைவர்
அரசின் ஏலத்தில் எடுத்தது, பயன்படுத்துவது சட்டத்தை மீறிய செயலாகும்.
தேசிய ஊரக உறுதி திட்டத்தின் மூலமாக சாத்தூர் உயர்நிலைப்பள்ளி,
சாத்தூர் சுற்றுசுவர் அமைக்க கட்டுமானப்பணி செய்ய ரூ.26 லட்சம் செலவில்
அரசு வழங்கப்பட்டுள்ளது.

 அதனால் நான் பூமிபூஜை செய்யும்போது 13-06-2022
காலை 9.00 மணிக்கு நானும், இரண்டு வார்டு உறுப்பினர்களும் சென்றபோது
வேலை ஆரம்பிக்க விடாமல் தடுத்து நிறுத்தினார். 
துணைத்தலைவர்
இளங்கோவன்  மற்றும் மூன்று நபர்கள் என்னை மிகவும் கேவலமாக
தவறான வார்த்தைகளால் பேசி தகராறு செய்தனர் மேலும் இதுபோன்ற பல
நேரங்களில் எந்த பணியும் செய்யவிடாமல் தடுக்கின்றனர்

 எனவே
துணைத்தலைவர் மீது தக்க விசாரணை நடத்தி நான் தொடர்ந்து மக்கள் பணி
செய்ய வழிவகை செய்யுமாறு தங்களை பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது மேலும் துணைத்தலைவர் அவருடன் சேர்ந்த நபர்கள் பள்ளி கட்டிட சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தியதால் இந்த திட்டப்பணி சாத்தூர் பள்ளிக்கு கிடைக்காமல் வேரொரரு ஊராட்சிக்கு மாற  வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Previous Post Next Post