சிதம்பரம் அருகே பயங்கரம்
சிதம்பரத்தை அருகே நஞ்சமகத்து வாழ்க்கை கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் அய்யப்பன் (வயது 20). சமையல் வேலை செய்துவந்தார்
இவர் கடந்த 20ந் தேதி கண்ணன் குடியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று தங்கியிருந்தார்.நேற்று மாலை முதல் அய்யப்பன் திடீரென மாயமானார். பல இடங்களில் அவரைபற்றி விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை
இந்நிலையில் அதே ஊரில் உள்ள கோணங்குளத்தில் தலையில் வெட்டு காயங்களுடன் வாலிபர் ஒருவர் பிணமாக மிதப்பதை கண்ட பொதுமக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்
சிதம்பரம் தாலுகா போலீசார் விரைந்து வந்து அந்த வாலிபரின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் சூரியமூர்த்தி✍🏼