பாகவெளி கிராமத்தில் இரு தரப்பினரிடையே வாக்குவாதம், சண்டை ,நீயா? நானா?
ராணிப்பேட்டை மாவட்ட பொது மக்களின் ஒட்டுமொத்த பார்வையும் வாலாஜா அடுத்த பாகவெளி என்ற கிராமத்தை நோக்கிதான் இருக்கிறது காரணம் ஆண்டுதோறும் சித்திரை முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று யாதவர்களின் குலதெய்வமான பாப்பாத்தி கன்னியம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம் 17.04.22 அன்று
நடக்கவிருந்த கன்னியம்மன் கோவில் திருவிழா வன்னிய சமூகத்திற்கும், யாதவர் சமுதாயத்திற்கும் இடையே சாதி மோதல்கள் ஏற்பட தற்போது அதிக வாய்ப்புள்ளதால் இந்த திருவிழாவை அரசு அதிகாரிகள் நடத்த தடைவிதித்து உத்தரவிட்டனர் மேலும் 10-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்
அந்த கிராமத்தில் சாதி மோதல்கள் ஏற்படும் அளவிற்கு அங்கு என்னதான் நடந்தது
வன்னிய சமூகத்தைச் சார்ந்த மக்கள்
இதற்கு காரணம் என்ன என்று கள ஆய்வில் ஈடுபட்ட போது கிடைத்த தகவல்கள் இதோ இந்த கிராமத்தில் ஏற்கனவே 1997-1998 - ஆம் ஆண்டுகளில் இரு சமூகத்தினர் இடையே சாதி கலவரம் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள் இதனால் பல ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்திருக்கின்றனர் இந்த நிலையில் தற்போது இரு தரப்பினரிடையே சமாதான உடன்படிக்கை ஏற்பட்டு இரு சமூக மக்களும் ஒன்றுகூடி பழைய திரௌபதியம்மன் கோவிலை புதுப்பித்து
குடமுழுக்கு செய்யும் தீமிதி திருவிழா, பொதுவாக நடத்திருக்கின்றனர் இந்தத் திருவிழாவின்போது பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த வன்னியர் சமூகத்தை சார்ந்த சிலர் கோவிலின் மீது தங்கள் சாதி சங்க கொடியை கட்டி தீமிதி திருவிழா தொடர்பான பாரம்பரியமான சடங்குகள் செய்வதில் யாதவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று ஆதிக்கம் செய்ததாக சொல்லுகிறார்கள்
வெகு நாட்களுக்குப் பிறகு இரு சமூகத்தினரும் சேர்ந்து நடத்திய திருவிழா என்பதால் யாதவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அமைதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது இந்த நிலையில் கங்கையம்மன் கோயில் அமைந்துள்ள குளக்கரையை ஒரு தனிநபர் ஆக்கிரமித்து டீக்கடை நடத்தி நடத்தி வந்ததாக சொல்லுகிறார்கள் இதனால் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து டீக்கடையை அகற்றியுள்ளனர்
அதனைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு ஊராட்சி மன்ற தலைவராக இருந்த சிவகாமிராமு குளத்தை ஆக்கிரமித்து சுமார் 150 சதுர அடி பரப்பளவில் பேருந்து நிழற்குடை கட்டியுள்ளனர்
தலைவராக மீண்டும் அடுத்த 5 ஆண்டு தலைவர் பதவிக்கு வருவதற்கு பொதுமக்கள் மத்தியில் தங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று குளத்தின் வடகிழக்கு கரையில் உள்ள ஒரு சிறிய கோவிலுக்கு சுற்றிவர இடம் வேண்டுமென குளத்தை சுற்றிலும் சுமார் 500 சதுர அடி ஆக்கிரமித்து மாணிக்கம் என்பவரின் தலைமையில் கட்டிடம் எழுப்ப முயற்சி செய்ததாகச் சொல்கிறார்கள்
இதனை எதிர்த்து யாதவர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் கெங்கை அம்மன் கோயிலை சுற்றி வரவேண்டி குளத்தை ஆக்கிரமித்து பட்டா நிலத்தையும் ஆக்கிரமித்து கட்டிடம் கட்ட முயற்சி செய்வதை தட்டிக் கேட்டுள்ளனர் அதற்கு எதிர்தரப்பினர் உங்களால் முடிந்ததை பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறியதாக சொல்கிறார்கள் இங்கிருந்துதான் சண்டைகள் ஆரம்பமாகி இருக்கின்றன இதனால் யாதவர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் காவல் நிலையம், தாலுகா அலுவலகம், ஆர்டிஓ அலுவலகம், pwd அலுவலகம் சென்று மனு கொடுத்துள்ளனர்
அதிகாரிகள் தலையிட்டதால் கட்டிடப் பணி நிறுத்தப்பட்டது அதே மாதத்தில் 30 ஆம் தேதி மீண்டும் பணியை தொடங்கியுள்ளனர் மறுபடியும் யாதவர் சமூகத்தினர் புகார் அளித்ததால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது இதனால் மேலும் கோபமடைந்த வன்னிய சமூகத்தைச் சார்ந்தவர்கள் 100க்கும் மேற்பட்ட நபர்கள் தடுத்து நிறுத்திய அதிகாரிகளின் பேரில் கோபம் அடைந்துள்ளனர் இதற்கு காரணமான இருந்த யாதவ சமூகத்தைச் சேர்ந்தவர்களையும் அச்சுறுத்திய தாகச் சொல்கிறார்கள் ஏற்கனவே நடந்த சாதிக் கலவரம் போல நடந்தால் தான் நீங்க அடங்க போறீங்க என்றெல்லாம் சொல்லி மிரட்டியதாக சொல்கிறார்கள்
அதிகாரிகள் சொல்லியும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் மேல் நடவடிக்கையாக யாதவர் சமூகத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் இந்த வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது இந்த நிலையில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த சில நபர்கள் தொடர்ந்து யாதவர் சமூகத்தினர் தொலை கொடுத்து வந்துள்ளனர் அதனைத் தொடர்ந்து யாதவர்களின் பண்டிகையான கிருஷ்ணஜெயந்தி விழா 2019-ம் ஆண்டு 23, 24 ஆம் தேதிகளில் நடைபெற்ற போவதை அதனை நடக்கவிடாமல் தடுக்க ஒரு வாரத்திற்கு முன்பாகவே வன்னியர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்ததாக சொல்லுகிறார்கள்
காவல் ஆய்வாளர் தனிநபர் திருவிழாவிற்கும், ஊர் வழக்கத்திற்கும் சம்பந்தமில்லை என்று விழாவை நடத்த அனுமதி கொடுத்துள்ளார் அப்படியிருந்தும் வன்னியர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் வட்டாட்சியர், கோட்டாட்சியரிடம் சென்று பொதுநல வழக்கு வாபஸ் வாங்காத வரை கிராமத்தில் எந்த திருவிழாவையும் நடத்த விடமாட்டோம் என்று வாதிட்டுள்ளனர் இருந்தாலும் கோட்டாட்சியர் அனுமதி அளித்துள்ளார் காவல் ஆய்வாளர் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்று இருக்கிறது
கிருஷ்ணஜெயந்தி திருவிழாவாக இருந்தாலும் வேறு எந்தத் திருவிழாவாக இருந்தாலும் அனைத்து பொதுமக்களும் சாமி ஊர்வலத்தில் தீபாராதனை வழக்கம் ஆனால் இந்த விழாவில் சாமி ஊர்வலம் வரும்போது வன்னிய சமூகத்தை சேர்ந்த சில நபர்கள் தீபாரதனை செலுத்தக் கூடாது என்று பொதுமக்களை தடுத்து நிறுத்தி உள்ளனர் 22. 8.19 அன்று கோட்டாட்சியர், வட்டாட்சியர் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் தொந்தரவு செய்யக்கூடாது, வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது
தனிநபர் திருவிழாவை தவிர, பொது திருவிழா என்றால் ஊர் மக்கள் இணைந்து தான் செய்ய வேண்டும் என்று என உத்தரவிட்டதாக சொல்கிறார்கள் ஆனால் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இரு சமூகத்தினரும் பொதுவாக நடத்தவேண்டிய மாரியம்மன் கோயில் திருவிழாவை தனிநபர் திருவிழாவை போல் நடத்தி பிரிவினையை பிரிவினை உண்டாக்கியதாக கூறுகிறார்கள் மாரியம்மன் கோயில் நிர்வாகம் வெள்ளையர் காலத்தில் இருந்து பூர்வகுடிகளான யாதவர் மக்களே நிர்வாகித்து வருவதாக சொல்லப்படுகிறது
நிர்வாகிகள் என்ற முறையில் கோயில் செப்பனிடும் பணியை செய்தபோது பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்தி இந்த பணியை செய்யக்கூடாது என்று வன்னியர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் சுமார் 150க்கும் மேற்பட்டோர் நபர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து தடுத்து நிறுத்தியதாக சொல்லப்படுகிறது ஆனாலும் வன்னிய சமூகத்தைச் சார்ந்தவர்கள் செல்லியம்மன் கோயில் திருவிழா, பெரிய ஆண்டவர் திருவிழா, மாரியம்மன் கோவில் திருவிழா, விநாயகர் சதுர்த்தி, பஜனை கோயில் திருவிழா, போன்ற திருவிழாக்கள் எல்லாம் நடத்தி இருக்கின்றனர்
இந்த திருவிழாக்கள் நடக்க கூடாத படி யாதவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் எந்த இடையூறும் செய்யவில்லை என்றே சொல்லுகிறார்கள்
இது சம்பந்தமாக இரு தரப்பினரிடமும் ஊராட்சி மன்ற தலைவர்,வட்டாட்சியர் ஆகியோரை சந்தித்துப் பேசினோம் முதலாவது யாதவ சமூக மக்களிடையே சென்று விசாரித்தோம் அவர்கள் கூறியதாது இந்த கிராமத்தில் பூர்விகக் குடிகள் நாங்கள் எங்களுக்கு சுமார் 300 ஏக்கர் நிலம் உண்டு இந்த கிராமத்தில் உள்ள பெரும்பான்மையான கோவில்கள் எங்களுடைய முப்பாட்டனுடைய கோவில்கள், பெரும்பாலும் நாங்கள்தான் நிர்வாகித்து வந்தோம்
வன்னிய சமூகத்தை சேர்ந்த மக்களும் நாங்களும் முப்பாட்டன் காலத்திலிருந்து ஒற்றுமையாக தான் வாழ்ந்து வந்தோம் ஆனால் தற்போது இங்கு வாழும் வன்னியர்கள் தங்கள் உறவு முறையினர் உறவினர்கள், தெரிந்தவர்கள், சொந்தம் இப்படி ஏராளமான மக்கள்பல்வேறு காரணங்களால் வந்து இந்த கிராமத்தில் குடியேறினதால் வன்னியர்கள் மக்கள்தொகையில் பெருகிவிட்டனர் நாங்கள் சிறுபான்மையினராக மாறி விட்டோம் தற்போது குடியேறி இருக்கின்ற மக்கள் தான் இரு சமூகத்தினரிடையே பெரும் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தி வருகின்றனர்
எங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் சிவகாமியின் கணவர் ராமு வன்னியர் இன மக்களின் ஓட்டுகள் அதிகமாக உள்ளதால் ஒவ்வொரு முறையும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் தான் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு சமூக ஓட்டுக்களை தக்கவைத்துக்கொள்ள வன்னிய இளைஞர்களை தூண்டிவிட்டு பின்புறமாக இருந்து தகாத வேலையை பார்த்து வருகிறார் இது நாள் வரையில் நடந்து வருகின்ற ஒவ்வொரு சண்டைக்கும் இவர் தான் முக்கிய காரணம் என்று குற்றம் சாட்டினர் ராமு மக்களைத் தூண்டிவிட்டு பாரம்பரியமாக நாங்கள் வணங்கி வரும் கோவில்களையும், எங்களுடைய சொந்த பட்டா நிலத்தில் குலதெய்வமாக வருடம் தோறும் வழிபட்டு வரும் பாப்பாத்தியம்மன் கோவிலை எழுதித் தரவேண்டும் என்று ஆட்களைத் தூண்டி விட்டு அராஜகம் செய்கிறார்
என்றனர் மேலும் அவர்கள் பேசிய போது கோவில்களுக்கு நடக்கும் திருவிழாக்களில் 60% பணத்தை யாதவர் சமூகத்தை சேர்ந்த நாங்கள் தான் கொடுத்து வருகிறோம் எதிர்தரப்பினர் 40 சதவீத தான் கொடுப்பார்கள் ஒவ்வொரு திருவிழாக்களிலும் வசூல் செய்த பணத்தை குறித்து சரியான முறையில் கணக்கு ஒப்புவி காமல் திருட்டு கணக்கு எழுதுவார்கள் இப்பொழுது கூட ஒற்றுமையாக இருந்து திருவிழா செய்வதற்காக எங்களை அழைக்கவில்லை 60% சதவீதம் பணத்தை நாங்களே கொடுத்து விடுகிறோம்
என்பதால்தான் எங்களை விட்டு விடுவதற்கு அவர்களுக்கு மனதில்லாமல் ஒன்று கூடி திருவிழா செய்வது போல பாவனை செய்கிறார்கள் என்று சாடினர்
அதனைத் தொடர்ந்து வன்னியர் சமூக மக்களிடையே விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது நாங்கள் அவர்களுக்கு சொந்தமான எந்தக் கோவில்களையும் சொத்துக்களையும் எழுதி கேட்கவில்லை யாரோ ஒரு சிலரால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டது தொடர்ந்து ஒருவருக்கொருவர் விடந்தா வாதம்
பேசிக்கொண்டே போனால் பிரச்சனைக்கு முடிவு வராது அதனால்தான் நாங்கள் அவர்களை சமாதான பேச்சுவார்த்தைக்காக அழைக்கிறோம் இருவரும் இணைந்தே திருவிழாக்களை நடத்துவோம் வாருங்கள் என்று சொல்லுகிறோம் நமக்குள் சண்டை வேண்டாம் ஒற்றுமையுடன் செயல்படுவோம் என்று கூறுகின்றோம் ஆனால் அவர்கள் ஒத்துழைப்பு தரவில்லை சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த இவர்களே இப்படி இருக்கும் போது
பெரும்பான்மையான சமூகத்தை சேர்ந்த நாங்கள் வைராக்கியம் பாராட்டினால் என்ன நடக்கும் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக ஆர்டிஓ, வட்டாட்சியர், போலீசார் முன்னிலையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது இந்தப் பேச்சுவார்த்தையில் நாங்கள் ஒற்றுமையுடன் செயல்பட தயார் என்று சொன்ன போதும், யாதவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இதற்கு ஒத்துழைப்பு தராமல் புறக்கணித்து வருகின்றனர்
மேலும் இது சம்பந்தமாக நீதிமன்றங்களுக்கு சென்று வழக்கு தொடுத்து வருகின்றனர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் போனால் மேலும் மேலும் சமாதான கேட்டுக்கு வழிவகுக்கும் சண்டைகள் உருவாவதற்கு வாய்ப்பு ஏற்படும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் இப்பொழுதும் நாங்கள் ஒற்றுமையுடன் செயல்பட தயாராக இருக்கிறோம்
எதுவாக இருந்தாலும் பேசித் தீர்த்துக் கொண்டு சமாதானத்தோடு திருவிழாக்களை நடத்த நாங்கள் எப்போதும் ஒத்துழைப்பு தர தயாராக இருக்கிறோம் என்றனர் அதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்றத் தலைவர் சிவகாமியின் கணவர் ராமுவிடம் பேசியபோது அவர் கூறியதாவது நீங்கள் இளைஞர்களை தூண்டிவிட்ட இரு சமூகத்தினரிடையே பிரிவினை உண்டாக்குவதற்கு பின்புலமாக செயல்படுகிறார்
என்று யாதவர் சமூகத்தினர் குற்றம்சாட்டுகின்றனர் இதற்கு நீ என்ன? சொல்ல விரும்புகிறீர்கள் என்று ராமுவிடம் கேட்டபோது அதற்கு அவர் கூறியதாவது நான் எப்பொழுதுமே ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதில்லை இரு சமூகத்தினரும் எனக்கு வேண்டியவர்கள் எனக்கு பணம் மற்றும் இதர தேவைகளூக்காக கொடுத்தல் வாங்கல் அதிகமாக இருக்கும் பகுதி யாதவர் பகுதிதான் அண்ணன், தம்பியாக மாமன் ,மச்சானாக எந்த ஒரு பாகுபாடுமின்றி இது நாள் வரை பழகி வருகிறோம்
நடந்த முடிந்த ஊராட்சி மன்ற தேர்தலில் கிட்டத்தட்ட 140 வாக்குகள் யாதவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என் மனைவிக்கு வாக்களித்திருக்கின்றனர் நான் எப்பொழுதும் நடுநிலையாக தான் நடந்து கொள்வேன் அவர்கள் சொல்லும் குற்றசாட்டை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன் என் மீது அபாண்டமாக பொய் சொல்லுகிறார்கள் என்றார்
அதனைத் தொடர்ந்து வாலாஜா வட்டாட்சியர் ஆனந்தனிடம் இது சம்பந்தமாக கருத்து கேட்டபோது
அவர் கூறியதாவது இருதரப்பினரையும் அழைத்து சார் ஆட்சியர் தலைமையில் போலீசார் முன்னிலையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினோம் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் விரோதமாக பேசியதால் சார் ஆட்சியர் இரு சமூகத்தினரும் சேர்ந்து ஒற்றுமையுடன் திருவிழா நடத்தினால், நடத்துங்கள் இல்லை என்றால் எந்த திருவிழாக்களையும் நடத்தக்கூடாது என்று தடை உத்தரவு பிரார்த்தித்தார்
என்றார்
மேலும் அக்கிராமத்தில் இரு தரப்பினரும் ஒற்றுமையுடன் வந்து திருவிழா நடத்த அனுமதி கேட்கும் வரை தடை நீடிக்கும் என்று இவ்வாறு அவர் கூறினார்.பேச்சுவார்த்தை நடத்தி சாதாரணமாக முடிக்கவேண்டிய இந்த சண்டையை நீயா நானா என்ற ஈகோ பிரச்சினையால் இருதரப்பினர் இடையே சாதி மோதல்கள் ஏற்படும் அளவிற்கு உருவெடுத்து நிற்கிறது
சாதி மோதலா? சமாதானமா? எந்த நிலையில் முடியுமென்று தெரியவில்லை இருதரப்பினரும் ஒற்றுமையுடனும் சமாதானமாக வாழ வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் பலரின் எதிர்பார்ப்பு.