பிளாஸ்டிக் கம்பெனியை தடை செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் ஊராட்சி மன்ற தலைவர் மனு
ராணிப்பேட்டை மாவட்டம்
காவேரிப்பாக்கம் ஒன்றியம் பெருகரும்பூர் பஜனை கோயில் தெருவில் வசித்து வரும் தினேஷ் காந்தி என்பவரின் மனைவி திவ்யபாரதி தினேஷ் காந்தி இவர் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஈராளச்சேரி ஊராட்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார்
ஈராளச்சேரி ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றி வருகிறார் இந்த நிலையில் கடந்த
23.04.22 அன்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் அவர்களிடம் மனு ஒன்றை அளித்தார் அந்த மனுவில் ஈராளச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பிளாஸ்டிக் கம்பெனி செயல்பட்டு வருவதாகவும் இதனால் பொதுமக்களுக்கு மிகப் பெரிய ஆபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளதாகவும் இதனைத் தடை செய்ய வேண்டும் என மனுவில் கூறியுள்ளனர் .
இதன் முழு விவரம் அறிந்து கொள்ள ஈராளச்சேரி ஊராட்சிமன்ற அலுவலகத்தில் தலைவர் திவ்யபாரதி தினேஷ் காந்தியை நேரில் சந்தித்து கருத்து கேட்டபோது அவர் பேசியதாவது
ஈராளச்சேரி ஊராட்சிக்குட்பட்ட எல்லை சர்வே எண்:
280/1ல் 3700 சதுர மீட்டர் பரப்பு கொண்ட மனையிடத்தில் 150 HP மின் திறனுடன்
ஊராட்சி மன்றத்தின் கட்டட அனுமதி பெறாமலும்,பிளாஸ்டிக் நெகிழி தொழில் நிறுவனம் நடத்துவதற்கான
உரிமம் (RUNNING LICENSE) பெறாமலும்,
சட்ட விரோதமாகவும், பொது மக்களுக்கு சுகாதார
சீர்கேடு விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டு வருகிறது .இந்த பிளாஸ்டிக் கம்பெனியை செயல்பட விடாமல் தடை செய்ய வேண்டுமென்ற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று
தொழிற்கூட நிறுவனத்திற்கான கட்டட வரைபட அனுமதி மற்றும் தொழில்
நடத்துவதற்கான் உரிமம் ஆகியவற்றை உரிய ஆவணங்களை சமர்பிக்குமாறு கேட்டபோது,அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்களில் தொழிற்சாலைக்கு வாங்கப்பட்ட உரிமம் அனைத்தும் ஆலப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட உரிமம் என்பது தெரியவந்தது
அவர்கள் வாங்கிய உரிமத்திற்கும் ஈராளச்சேரி ஊராட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவே முறையான அனுமதிகளை பெறும் வரை தொழிற்சாலையின் அனைத்து
இயக்கங்களையும் நிறுத்தி வைக்குமாறும் ஊராட்சியின் சார்பாக அந்த கம்பெனிக்கு முறையாக கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது.
தவறும்பட்சத்தில் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, பிரிவின்படி
தமிழ்நாடு கிராம ஊராட்சி தொழில் வர்த்தகம், அமைப்புகள் வரையறுக்கப்பட்டுள்ளவாறு
உமது நிறுவனம்
தொடர்ந்து செயல்படுவதை தடுக்கும் பொருட்டு சீல் வைப்பதுடன் அபராதம் விதித்தல்
உள்ளிட்ட நடவடிக்கைகளுடன் நீதித்துறையின் மூலம் சட்டரீதியான நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது என்றார் மேலும் இந்த தொழிற்சாலை சம்பந்தமாக மின்சாரத்துறை, சுகாதாரத்துறை, மாவட்ட ஊராட்சி இயக்குனர் அனைவருக்கும் கடிதம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது தொடர்ந்து அவர் பேசுகையில்
இந்த கம்பெனியில் பிளாஸ்டிக் கழிவுகள் சென்னையிலிருந்து கொண்டு வரப்பட்டு தரம் பிரித்து ஒருவிதமான ஆயில் தயார் செய்கின்றனர்
இந்த தொழிற்சாலையின் மூலமாக வெளிவரும் கார்பன் டை ஆக்சைடு கலந்தபுகை சுற்றுவட்டார பகுதியில் மிகப் பெரிய துர்நாற்றத்தை உருவாக் வருகிறது சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் வரை துர்நாற்றம் கம்பெனி அருகிலேயே போக முடியவில்லை மூச்சுத் திணறல் ஏற்படுகிறது இதனால் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பொதுமக்கள் மூச்சு திணறல், நுரையீரல் புற்றுநோய், சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது
மேலும் நிலத்தடி நீர், குடிநீர் கெட்டுப்போகும் சூழலும் நெருங்கி வருகிறது
தொடர்ந்து ஐந்து வருடம் இந்த கம்பெனி இந்த பகுதியில் இயங்குமானால் மிகப்பெரிய அளவில் உயிர் சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது எனவே எங்கள் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் இந்த பிளாஸ்டிக் தொழிற்சாலை எங்கள் எல்லைகள் விட்டு அகற்றும் வரைக்கும் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் எங்கள் போராட்டம் ஒழியாது தொடர்ந்து போராடுவோம் என்று தெரிவித்தார் இந்த கம்பெனி சம்பந்தமாக தான் மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு அளித்தோம் என்றார்.