பெரியகுளத்தில் கிணற்றில் தவறி விழுந்து வழக்கறிஞர் உயிரிழப்பு
தேனி மாவட்டம் பெரியகுளம் பாரஸ்ட் ரோடு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் கிணற்றில் தவறி விழுந்து அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெபராஜ் (40) என்பவர் உயிர் இழந்த நிலையில் கிடந்துள்ளார்.
அருகில் இருந்தவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க விரைந்து வந்த பெரியகுளம் காவல் துறையினர் பொதுமக்கள் உதவியுடன் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இளம் வழக்கறிஞர் ஜெபராஜ் -ன் உயிரிழப்பால் அப்பகுதி மக்கள் சோகத்தில் உள்ளனர்