தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கல்லூரி மாணவி மர்ம மரணம்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கல்லூரி மாணவி மர்ம மரணம்

பெரியகுளம் வடகரை பட்டாபுளி தெருவை சேர்ந்த 17 நல்லையன் மகள் நித்யாதேவி கைலாசபட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் தங்கிபடித்து வருகிறார். இவருக்கும் அதே தெருவைச் சேர்ந்த 20 வயதுள்ள மணிமகன் பெரியசாமி என்பவரும் காதலித்து வருவதாக சொல்லப்படுகிறது. நித்யாதேவியின் பெற்றோர் 17 வயதுள்ள மைனர் பெண்னை காதலிப்பது தவறு என்றும் பெரியசாமி இளம்வயதிலையே மது. கஞ்சா போன்ற போதை பொருட்களை பயன்படுத்தும் பெரியசாமியை கண்டித்து வையுங்கள் என்று பலமுறை பெரியசாமியின் பெற்றோரிடம் வலியுறுத்தியுள்ளனர்.


இந்த நிலையில் தொடர்ந்து அரசு விடுமுறை என்பதால் வீட்டுக்கு வந்த நித்யா தேவியை பெரியசாமி தனிமையில் பேசவேண்டும் என அழைத்து இருசக்கர வாகனத்தில் நண்பர்களின் உதவியோடு தேவதானப்பட்டி அருகில் பெரியகுளம் மதுரை சாலையில் தனியார் கல்லூரிக்கு பின்புறம் உள்ள கரட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று இரவு நேரத்தில் தனிமையில் பேசிஉள்ளார்கள்.

இச்சம்பவத்தை தொடர்ந்து இருவரும் . விஷமருந்தை உட்கொண்டதாக சொல்லப்படுகிறது- இதனால் கல்லூரி மாணவி நித்யா தேவி மட்டும் சம்பவ இடத்திலையே இறந்துகிடந்துள்ளார். பெரியசாமி சம்பவ இடத்தைவிட்டு நடந்துவந்து அருகில் இருந்தவர்களிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். அருகில் இருந்தவர்கள் பெரியசாமியை 108 ஆம்புலன்ஸ் மூலமாக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு தேவதானப்பட்டி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்

விரைந்து வந்த காவல்துறை நித்யா தேவியின் உடலை கைப்பற்றி உடற்க்கூராய்வுக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்புவைக்கப்பட்டு- விசாரனை செய்து வருகின்றனர்.

அதேசமயம் கல்லூரி மாணவி 17 வயதான நித்யா தேவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பெரியகுளம் பகுதியில் மது. கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் தாராளமாக கிடைப்பதால் சிறுவர்கள் - இளைஞர்கள் என அனைவரும் தாராளமாக பயன்படுத்துவதால் இது போன்ற சம்பவம் நடப்பதாக சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டுகின்றனர்
Previous Post Next Post