பெரியகுளம் அருகே கெங்குவார்ப்பட்டியில் பேரூராட்சி செயல்அலுவலர், தலைவர், துணை தலைவர் செயலை கண்டித்து சாலை இடையே மரம் கட்டி, குப்பைகளை கொட்டி சாலை மறியல்.....
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகிலுள்ள கெங்குவார்பட்டியில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட உமா பாண்டியராஜன் அவர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கெங்குவார்ப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட அதிக வார்டுகளில் திமுகவைச் சார்ந்த நபர்கள் வெற்றி பெற்றதால் தலைவர்,துணைத் தலைவர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்தவர்கள் பதவி வகித்து வருகின்றனர். கெங்குவார்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட நான்காவது வார்டில் அதிமுகவைச் சேர்ந்த உமா பாண்டியராஜன் வெற்றி பெற்றதால் அந்த பகுதியில் சரிவர எந்த ஒரு வேலையும் அரசின் திட்டத்தையும் பேரூராட்சி நிர்வாகம் செய்வதில்லை என்றும் முறையாக போன் செய்து அதிகாரிகளிடம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் இதுபற்றி கேட்டால் நாங்கள் என்ன செய்ய முடியும் என்று குதர்க்கமாக பேசி வருகிறார். 4வது வார்டு பகுதியில் குப்பைகளை சரிவர அல்லாமல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அலட்சியப் போக்கை கடைப்பிடித்து வந்ததால் இன்று 4வது வார்டு பேரூராட்சி கவுன்சிலர் உமா பாண்டியராஜன் அவர்கள் தாம் உள்ள பகுதிகளில் உள்ள குப்பைகளை அள்ளி வந்து வத்தலகுண்டு செல்லும் சாலையில் கொட்டி சாலையின் இடையே மரத்தால் கட்டி மறைத்து சாலை மறியலில் ஈடுபட்டார். மேலும் கெங்குவார்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் பேரூராட்சித் தலைவர் துணைத் தலைவர் ஆகியோரின் செயலைக் கண்டித்து பேசினார்.