தமிழகத்தில் கடந்த ஓராண்டில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு பெற்றவர்களிடம் காணொலி மூலமாக கலந்துரையாடும் நிகழ்வில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி விழாப் பேருரையாற்றினார். தேனி மாவட்டம், பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், காணொலி காட்சி மூலமாக விவசாயிகள் உரையாடும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார், பெரியகுளம் ஒன்றிய செயலாளர் எல்.எம்.பாண்டியன், எண்டப்புளி ஊராட்சி மன்றத் தலைவர் சின்னப்பாண்டியன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 1000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை பெரியகுளம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் பாலபூமி, உதவிப் பொறியாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் செய்திருந்தனர்.
தமிழகத்தில் கடந்த ஓராண்டில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு பெற்றவர்களிடம் காணொலி மூலமாக கலந்துரையாடும் நிகழ்வில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி விழாப் பேருரையாற்றினார். தேனி மாவட்டம், பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், காணொலி காட்சி மூலமாக விவசாயிகள் உரையாடும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார், பெரியகுளம் ஒன்றிய செயலாளர் எல்.எம்.பாண்டியன், எண்டப்புளி ஊராட்சி மன்றத் தலைவர் சின்னப்பாண்டியன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 1000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை பெரியகுளம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் பாலபூமி, உதவிப் பொறியாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் செய்திருந்தனர்.
தமிழர் களம் மாத இதழ்
0