கிள்ளை நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் வழங்கினார்

கிள்ளை நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் வழங்கினார்
 பரங்கிப்பேட்டை அருகே உள்ள கிள்ளை பேரூராட்சியில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்ட தொடக்க விழா நடைபெற்றது இதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார் பேரூராட்சி துணை தலைவர் கிள்ளை இரவீந்திரன் வரவேற்றார் கோட்டாட்சியர் ரவி பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இளங்கோவன் பேரூராட்சி மன்ற தலைவர் மல்லிகா முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் முத்து பெருமாள் தெற்கு ஒன்றிய பொருளாளர் கலையரசன் புவனகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் மனோகரன் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர் இன் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் கலந்துகொண்டு நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார் நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைமை எழுத்தாளர் செல்வம் கீள்ளை பேரூராட்சி உறுப்பினர்களும் மற்றும்அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்றத் தலைவர் பழனி கீள்ளை ஒன்றிய பிரதிநிதி மலையரசன் முடிவில் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வி நன்றி கூறினார்
Previous Post Next Post