சாத்தூர் ஊராட்சியில்
தலித் தலைவருக்கு ஊராட்சி செயலாளர் எம்.திருமால் ஒத்துழைப்பு தராமல் புறக்கணிப்பு மனம் திறக்கிறார் தலைவர் சா.மா சேட்டு
சாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சா.மா சேட்டு
ஊராட்சி செயலாலர் என்பவர் ஒவ்வொரு ஊராட்சியிலும் ஊராட்சி மன்ற தலைவரின் கட்டுப்பாட்டின்கீழ் பணிபுரிபவர் ஊராட்சி செயலாலருக்கு விடுப்பு ஊராட்சி மன்ற தலைவர் அனுமதிப்பார் 60 நாட்களுக்கு மேற்பட்ட விடுப்புகளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் அனுமதிப்பார்
இவரின் கடமைகளும் பொறுப்புகளும் பொறுத்தவரையில் வரி கோப்புகளை தயாரித்தல் மற்றும் அனுப்புதல், ஊராட்சி உள்ளிட்ட வருவாய் வசூல் மற்றும் புத்தகங்கள் தொடர்புடைய பதிவேடுகள் பராமரித்தல்,
அருவருக்கத்தக்க மற்றும் அபாயகரமான தொழில்களுக்கான வரி வசூல் செய்தல்,
ரொக்கபுத்தகம் உள்ளிட்ட வருவாய் மற்றும் செலவினம் தொடர்புடைய 1 முதல் 31 பதிவேடுகள் பராமரித்தல், ஊராட்சி சொத்து பதிவேடு பராமரித்தல்,ஊராட்சியில் மாதாந்திரக் கூட்டத்தை ஏற்பாடு செய்தல், கிராமசபை கூட்டங்கள் ஏற்பாடு செய்தல், ஊராட்சி தீர்மானங்களை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி உதவி இயக்குனர் அவர்களுக்கு அனுப்புதல்,
செலுத்து சீட்டுகளுக்கு இலக்கம் இடுதல், ரொக்க புத்தகத்தில் பதிவு செய்தல் மற்றும் விரிவாக்க அலுவலர் இயக்குனர் ஊராட்சிக்கு அறிக்கை அனுப்புதல்,
ஊராட்சியில் குடிநீர் வழங்குதல், தெருவிளக்கு பராமரிப்பு, சாலை பராமரிப்பு உள்ளிட்ட பராமரிப்பு பணிகள், மத்திய மாநில அரசுகளால் கொண்டுவரப்படும்
திட்டங்களை செயல்படுத்துதல்,
கிராம ஊராட்சித் தலைவருக்கு உதவுதல், ஊராட்சியில் வரவு செலவு திட்டத்தை தயாரித்தல், கிராம ஊராட்சி சாலைகள் ஊராட்சி ஒன்றிய சாலைகள் மற்றும் ஊராட்சி புறம்போக்கு நிலங்கள் பற்றிய பதிவேடுகளை பராமரித்தல், ஊராட்சி பணியாளர்களுக்கான ஊதிய வழங்கு பதிவேடு பராமரித்தல், கிராம ஊராட்சி தொடர்புடைய அனைத்து எழுத்தர் பணிகள் மற்றும்
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தினசரி பணியாளர் வருகை பதிவேட்டை பராமரித்தல், அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் ஒப்படைக்கும் மற்றும் இதர பணிகள் இவை அனைத்தும் ஊராட்சி செயலாலரின் பொறுப்புகளும் கடமைகளுமாக இருக்கின்றன
இவ்வாறான கடமைகளில் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஒன்றியம் சாத்தூர் ஊராட்சியில் பணிபுரியும் கிழ்மின்னல் கிராமத்தைச் சேர்ந்த சிவன் கோவில் தெருவில் வசித்துவரும் மாசிலாமணி நவநீதம் என்பவரின் மகன் எம்.திருமால் இவர் ஒவ்வொரு நாளும் கீழ்மின்னல் கிராமத்திலிருந்து சாத்தூர் ஊராட்சிக்கு சுமார் 15 கிலோ மீட்டர் பயணம் செய்து சாத்தூர் ஊராட்சியில் பணியாற்றி வருகிறார்
இவர் ஊராட்சியில் பெரும்பான்மையான கடமைகளையும் பணிகளையும் சரிவர செய்வதில்லை என்றும் ஊராட்சி மன்ற தலைவர் சா.மா. சேட்டுக்கும் பொதுமக்களுக்கும் ஒத்துழைப்பு தருவதில்லை என்றும் அதே ஊராட்சியை சேர்ந்த சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்
இது சம்பந்தமாக ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஒன்றியம் சாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சா.மா.சேட்டுவிடம் கருத்து கேட்டபோது அவர் பேசுகையில் ஊராட்சி செயலாலர் திருமால் எனக்கு மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறார் . எனக்கு எந்தவிதத்திலும் ஒத்துழைப்பு தருவது கிடையாது, சரியான நேரத்துக்கு அலுவலகம் வருவது கிடையாது,
எந்த தேவைக்காவது போன் மூலம் தொடர்பு கொண்டால் போன் எடுப்பதில்லை, பணம் செலவழித்து அதற்குண்டான கணக்கு கேட்டால் வாய்திறந்து பதில் சொல்வது கிடையாது,
ஊராட்சியில் சிலநேரங்களில் கூலிக்கு ஆட்களை வைத்து வேலை செய்தால் அவர்களுக்கு எவ்வளவு கூலி கொடுக்கப்பட்டது அதன் விவரம் சொல்வது கிடையாது,
ஊராட்சி கணக்கு புத்தகங்களையோ,வங்கி கணக்கு புத்தகங்களையோ ரொக்க இருப்பு எவ்வளவு இருக்கிறதென்று என்னிடம் காட்டுவது கிடையாது, இவரால் ஊராட்சி திட்டங்களை செயல்படுத்தவும் மக்கள் பணி செய்யவும் என்னால் முடியவில்லை தடையாக இருக்கிறார் சமீபத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்திற்கு கூட்டம் முடிந்த பிறகு வருகிறார்
மேலும் கடந்த 26ம் தேதி குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள நேரில் சொல்லியும் கலந்து கொள்ள இல்லை சில நேரங்களில் என் காது கேட்பதுபோல இவர்களுக்கெல்லாம் தலைவர் பதவி ஒரு கேடா? தலைவர் பதவிக்கு வரலனா யார் அடித்தது என்று முனுமுனுப்பார் சில நேரங்களில் சாதிப் பெயரும் அவர் வாயில் ஓடும் இதனால் எனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்படுகிறது
இது சம்பந்தமாக ஆற்காடு BDO விடம்
பலமுறை எடுத்துக் கூறியும் இதுநாள் வரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை மேலும் ஊராட்சி செயலாலர் திருமால் குறித்து கடந்த 3.01.22 தேதி இவரை இடமாற்றம் செய்ய கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தேன் அதற்கும் இதுநாள் வரையில் எந்த நடவடிக்கையும் இல்லை
இதற்கெல்லாம் காரணம் நான் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஊராட்சி செயலாளர் திருமால் எனக்கு வேண்டுமென்று ஒத்துழைப்பு தராமல் என்னை புறக்கணித்து உதாசீனப் படுத்தி வருகிறார் பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுதுதான் பட்டியலின சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிடும் வாய்ப்பு கிட்டியது
பல போட்டியாளர்கள் மத்தியில் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்தாலும் இந்த பதவியில் செயல்பட முடியாமல் பல வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகிறேன் என்றார்
துறை சார்ந்த அதிகாரிகள் இந்த நிலையை சரி செய்வார்களா? ஊராட்சி செயலர் எம்.திருமால் இடமாற்றம் செய்யப்படுவாரா? ஊராட்சி மன்ற தலைவர் சேட்டுவின் இந்த நிலைக்கு தீர்வு கிடைக்குமா? சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் அரசின் திட்டங்கள் சாத்தூர் ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவரால் செயல்படுத்த வேண்டும் பலரின் எதிர்பார்ப்பு!!