தேனி மாவட்டம், தென்கரை பேரூராட்சியில், நிலைக்குழு உறுப்பினர் தேர்தல், பேரூராட்சி தலைவர் நாகராஜ், துணைத் தலைவர் ராதா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலர் இப்ராஹிம் முகமது பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில், தேர்தலை நடத்தினார். இதில், வரி விதிப்பு மேல் முறையீட்டு குழு உறுப்பினர்களாக செ. முத்துக் காமாட்சி, எஸ்.சிட்டம்மாள், அழகுத் தாய், மகேஸ்வரி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நியமனக்குழு உறுப்பினராக லட்சுமணன் தேர்வு செய்யப்பட்டார். தாமரைக்குளம் பேரூராட்சியில் நிலைக்குழு உறுப்பினர் தேர்தல் , பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன், துணைத் தலைவர் மலர்க்கொடி சேதுராமன் ஆகியோர் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் பஷீர் அகமது முன்னிலையில் நடைபெற்றது. இந்த தேர்தலில், வரி விதிப்பு மேல் முறையீட்டு குழு உறுப்பினர்களாக தேவகி தென்னரசு, கோமதி ராதாகிருஷ்ணன், முனியம்மாள், கவிதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதே போல், நியமனக்குழு உறுப்பினராக பாலாமணி தேர்வு செய்யப்பட்டார். பெரியகுளம் நகராட்சியில், நிலைக்குழு உறுப்பினர் தேர்தல் பெரியகுளம் நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் தலைமையில்,துணைத்தலைவர் பிரேம்குமார் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் புனிதன் இந்த தேர்தலை நடத்தினார். இதில், நியமனக்குழு உறுப்பினராக கிஷோர் பானு தேர்வு செய்யப்பட்டார். வரி விதிப்பு மற்றும் மேல் முறையீட்டுக் குழு உறுப்பினர்களாக நாக பாண்டி, குமரன், ராஜேஸ்வரி, ஆபிதா பேகம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
பேரூராட்சிகளில் நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்வு தேனி, ஏப்.1-
தமிழர் களம் மாத இதழ்
0