தேசிய சிறுபான்மை மக்கள் இயக்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த முதுகரை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது இந்த செயற்குழு கூட்டத்திற்கு மாநில செயலாளர்
வே.ஜெபராஜ் மகாலிங்கம் தலைமை தாங்கினார்
மாநில தலைவர் எஸ்.ஜான் பால், மற்றும் மாநில பொருளாளர் வி.மணிவேல் ஜோசப் முன்னிலை வகித்தனர் இக்கூட்டத்தில் 75 க்கும் மேற்பட்ட மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் இக் கூட்டத்தில் முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
மாநிலத் தலைமைக் குழு நியமனம், மாவட்டம்தோறும் கட்சி வளர்ச்சிக்கு மாநில நிர்வாக குழு அமைத்து செயல்படுத்துதல், கட்சியின் பத்திரிகை மற்றும் ஆன்லைன் சேனல் ஆரம்பிக்க, போன்ற முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
அதனைத் தொடர்ந்து தேசியத்தலைவர்
ஜா.ஜோயல் சுந்தர் சிங் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார் அவர் பேசுகையில் மாநிலம் முழுவதும் மாவட்டம், ஒன்றியம், நகரம் கிளைகளை உருவாக்கி காட்சியை பலப்படுத்த வேண்டும் கட்சியில் சிறப்பாக செயல்படும் பொறுப்பாளர்களுக்கு வருடம்தோறும் விருதுகள் வழங்கப்படும் என்றார்
மேலும் இந்தியா முழுவதும் உள்ள சிறுபான்மையினருக்கும் குறிப்பாக கிறிஸ்தவர்களுக்கும் எங்கெல்லாம் உரிமைகள் மறுக்கப்படுகிறதோ? அத்துமீறல்கள் நடக்கிறதோ? அங்கே நம்முடைய இயக்கம் சென்று உரிமைகளை வென்றெடுக்க ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றார்
மேலும் அவர் பேசுகையில் அன்பு, சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி நிலைநாட்டை நாம் பாடுபட வேண்டும் என்று பல்வேறு கருத்துகளை பேசினார் நிகழ்ச்சியின் இறுதியில் கட்சியின் தினசரி காலண்டர் வெளியிடப்பட்டது முதல் பிரதியினை பாண்டிச்சேரி மாநிலச் செயலாளர் கிதியோன் ஆனந்தன் பெற்றுக்கொண்டார் நிகழ்ச்சியில் இறுதியில் மாநில இணை செயலாளர் ஜெ.ஜான் ஜேகப் நன்றி கூறினார்.