மன்னாாகுடியில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் சுமார் 1000த்திற்கும் மேற்பட்டோர் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னாாகுடியில்  கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஆதரவாக  கல்லூரி மாணவர்கள் சுமார் 1000த்திற்கும் மேற்பட்டோர் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
UGC நிர்ணயித்த ரூ.57,700 ஊதியத்தை கௌரவ விரிவுரையாளர்களுக்கு வழங்க வேண்டும் . அனைத்து அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கு PF & EPF வழங்க வேண்டும் ஓய்வு பெற்ற கௌரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.25 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கௌரவ விரிவுரையாளர்கள் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில்  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மன்னை ராஜகோபாலசுவாமி அரசினர் கலைக்கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து  கல்லூரி வாயில் முன்பு கருப்பு பேட்ஜ் அணிந்து கையில் பதாகைகளை ஏந்தியவாறு தமிழக அரசை கண்டித்து கண்டனம் முழக்கம் எழுப்பி  காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .கௌரவ வரிவுரையாளர்களுக்கு  ஆதராவாக  மன்னை ராஜகோபாலசுவாமி அரசினர் கலைக்கல்லூரி மாணவ மாணவியர்கள் சுமார் 1000-த்திற்கும் மேற்பட்டோர்  வகுப்புகளை  புறக்கணித்து தமிழக அரசை வலியுறுத்தி கண்டன முழக்கம் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.    

FILE NAME :   TVR MANNARGUDI  STUDENTS ARPATTAM NEWS 18.02.2026
Previous Post Next Post