மன்னார்குடி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் அன்னாபிஷேகம் சிறப்பாக கொண்டாடப்பட்டது . திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் .
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி காசி விஸ்வநாதர் ஆலயமானது மிகப் பழமை வாய்ந்த கோவிலாகும் புகழ்பெற்ற ராஜகோபாலசாமி கோவிலில் அருள் பாலிக்கும் செங்கமலத்தாயார் இந்த திருப்பாற்கடலில் தான் அவதரித்ததாக கோவில் ஸ்தல வரலாறு கூறுகிறது அப்படிப்பட்ட காசி விஸ்வநாதர் ஆலயத்தில் காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் ஆலயத்தில் அன்னாபிஷேகம் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி மாலை வேலையில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அன்னம், காய்கறிகளைக் கொண்டு சிவபெருமானை அழகாக அலங்கரித்து விசேஷ தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.