உச்ச நீதிமன்ற நீதிபதி அவமதிப்பு சம்பவத்துக்கு இந்திய குடியரசு கட்சி தமிழ் மாநிலத் தலைவர் கண்டனம்
தலித் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை - தனி ஆணையம் அமைக்க கோரிக்கை
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் அனந்தலை தங்கராஜ் வாலாஜாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,
சமீபத்தில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் செருப்பை வீசினார். இந்தச் சம்பவம் அக்டோபர் 6, 2025 அன்று நடைபெற்றது.
வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், கஜுராஹோவிலுள்ள ஜவாரி கோவிலில் விஷ்ணு சிலையின் அமைப்பை மீட்டெடுக்கக் கோரி ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தள்ளுபடி செய்தார். அப்போது அவர், "சிலையை மீட்டெடுக்கக் கோரி கடவுளிடம் சென்று பிரார்த்தனை செய்யுங்கள்" என்று கூறினார். இதன் காரணமாகவே அவர் செருப்பை வீசியுள்ளார் இந்த சம்பவம் இந்தியாவிற்கு அசிங்கம், கேவலம் அகில உலகமே அதிர்ந்து போயிருக்கிறது இதனை இந்திய குடியரசு கட்சி வன்மையாக கண்டிக்கிறது அவரை கைது செய்தால் மட்டும் போதாது ஜாமினில் வெளிவராதபடிக்கு சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும்
எனக் கேட்டுக் கொண்டார்
உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கே பாதுகாப்பு இல்லை
மேலும், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்தில் குறைவாகவே உள்ளனர் என சுட்டிக்காட்டினார்.
தலித் மக்கள் பாதுகாப்பு குறித்து பேசிய அனந்தலை தங்கராஜ், தமிழகத்தில் கடந்த ஓராண்டில் 28 சாதிய படுகொலைகள் உட்பட பல வன்கொடுமைகள் நடந்துள்ளன என்றார்.
அம்பேத்கர் சிலைகள் தொடர்ந்து அவமதிக்கப்படுவதாகவும் வேதனை தெரிவித்தார். திமுக ஆட்சியில் தலித் மக்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனக் குற்றம் சாட்டிய அவர், தலித் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தனி ஆணையம் அமைக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்தார்.
சமீபத்தில் தவெக கட்சியின் சார்பில் நடைபெற்ற கரூர் பிரச்சார பொதுக்கூட்டத்தில் 42 பேர் உயிரிழந்துள்ளனர் இதில் 20 பேர் கட்சிக்காரர்கள் மற்றவர்கள் ரசிகர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லி உதவி செய்ய வேண்டிய அக்கட்சியின் தலைவர் விஜய் ஒளிந்து கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது இளைஞர்கள் நடிகர்களின் பின்பாக போவதை விட்டு சிந்தித்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்
வரும் நவம்பர் 23ஆம் தேதி அம்பேத்கரின் பேரன் எஸ்வந்த் பீமாராவ் தமிழகம் வருவதாகவும், அவருக்கு வேலூரில் வரவேற்பு அளிக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து வேலூர் பள்ளிகொண்டாவில் உள்ள கிருஷ்ணசாமியின் நினைவிடத்திலிருந்து அம்பேத்கர் சட்டப் பாதுகாப்பு ரத யாத்திரை தொடங்கி சென்னை வரை செல்ல இருப்பதாகவும் அனந்தலை தங்கராஜ் அறிவித்தார்.