சின்னமனூர் சீப்பாலக்கோட்டை ரோட்டில் கரங்காட்டங்குளம் சாலை எதிரே இயங்கி வரும் பழக்கடையில் திடீர் தீ விபத்து ஒரு லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.

 சின்னமனூர் சீப்பாலக்கோட்டை ரோட்டில் கரங்காட்டங்குளம் சாலை  எதிரே இயங்கி வரும் பழக்கடையில் திடீர் தீ விபத்து ஒரு லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.!




தீ விபத்து ஒரு லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.!


தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே சின்னமனூர் பகுதியில் சீப்பாலக்கோட்டை செல்லும் சாலையில் சுந்தரமூர்த்தி என்பவரின் பழக்கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

இதில் பழக்கடையில் வைக்கப்பட்டுள்ள யு பி எஸ் இதிலிருந்து மின் கசிவு ஏற்பட்டு திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்பது முதல் கட்ட தகவல்

இச்சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கும் தீயணைப்பு துறை  தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

கடையில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பழக்கடையில் வைக்கப்பட்டுள்ள ஒரு லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து நாசமானது.

சின்னமனூர் பகுதியில் பழக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து சீப்பலக்கோட்டை சாலை முழுவதும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது, 

இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.....





Previous Post Next Post