இடுக்கி மூணாறு அருகே தேவிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உலவும் தெருநாய்கள் கடித்ததில் ஆறு மாணவ மாணவியர் காயமடைந்தனர்.!
தமிழக கேரள எல்லையை இணைக்கும் இடுக்கி மூணாறு அருகே தேவிகுளத்தில் அரசு தமிழ் மேல்நிலைப்பள்ளி உள்ளது.
300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படிக்கும் இப்பள்ளியில் இடைவேளை நேரத்தில் வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த ப்ளஸ் 1 மற்றும் ப்ளஸ் 2 மாணவ மாணவியர் ஆறு பேரை தெருநாய்கள் கடித்தது.
இதில் மாணவ மாணவியரின் சீருடை கிழிந்து காயம் ஏற்பட்டது. காயமடைந்த மாணவ மாணவியர் ஆறு பேருக்கும் பள்ளியில் முதலுதவி அளிக்கப்பட்டு, மூணாறு மத்துவமனையில் முதற்கட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மூணாறு, தேவிகுளம் பகுதிகளில் தெருநாய்கள் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளை கடிப்பது தொடர்கிறது.
எனவே, தெருநாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும் உள்ளாட்சி அமைப்புகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது....