இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள தாயனூர் அனைத்து அமைப்பின் உறுப்பினர்களுக்கான கூட்டம் 20.06.2025 நேற்று மாலை 7.15 மணி அளவில் ஒன்றியக் குழு உறுப்பினர் தோழியர் S. லெட்சுமிபிரபா தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் மணிகண்டம் ஒன்றிய செயலாளர் தோழர் M.R. முருகன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்
கூட்டத்தில் ஜூன் 24 அன்று காலை 7 மணி அளவில் சோமரசம்பேட்டை பெரியார் சிலை அருகில் இருந்து தோழர் எஸ். முத்தழகு நினைவு ஜோதி எடுத்துச் செல்ல இருசக்கர வாகனத்தில் அனைவரும் பங்கேற்பது
மாலை 4.00 மணி அளவில் பாலக்கரை ரவுண்டானம் அருகில் நடைபெறும் மாவட்ட மாநாடு பேரணியில் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்பது
ஜூன் 24 25 ஆகிய இரு தினங்கள் மாநாட்டு பிரதிநிதியாக லெட்சுமிபிரபா இந்திரா பிரேமா கலந்து கொள்வது
ஜூன் 21 இன்று தாயனூர் பகுதியில் மாநாட்டிற்கான நிதி வசூல் பொதுமக்களிடம் செய்வது
உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன கூட்டத்தை வாழ்த்தி மணிகண்டம் ஒன்றிய துணை செயலாளர்கள் தோழியர் M. மருதாம்பாள், தோழர் K. மேகராஜ் ஆகியோர் உரையாற்றி 35க்கும் மேற்பட்ட தோழர்களும் தோழியர்களும் கலந்து கொண்டு இறுதியாக ஒன்றிய குழு உறுப்பினர் தோழர் சசிகுமார் நன்றி கூறினார்