மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தேனி மாவட்ட ஜமாத் நிர்வாகிகள் உலமாக்கள் சந்திப்பு நிகழ்ச்சிமனிதநேய மக்கள் கட்சியினுடைய போடிநாயக்கனூர் பள்ளிவாசல் மண்டபத்தில் நடைபெற்றது.!



மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தேனி மாவட்ட ஜமாத் நிர்வாகிகள் உலமாக்கள் சந்திப்பு நிகழ்ச்சிமனிதநேய மக்கள் கட்சியினுடைய போடிநாயக்கனூர் பள்ளிவாசல் மண்டபத்தில் நடைபெற்றது.!

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பள்ளிவாசல் மண்டபத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தேனி மாவட்ட நிர்வாகிகள் உலமாக்கள் சந்திப்பு நிகழ்ச்சி மனித நேயமக்கள் கட்சி தேனி வடக்கு மாவட்ட தலைவர் அப்துல்லாஹ் பத்ரி தலைமையில் நடைபெற்றது.

தொடர்ந்து ஊராட்சி முதல் நாடாளுமன்றம் வரை சிறுபான்மையினர் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யவும், வக்பு ஒழிப்புச் சட்டத்தை தடை செய்ய வேண்டியும் இரட்டைக் கோரிக்கையை வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஜூலை 6ஆம் தேதி மதுரையில் எழுச்சி பேரணி மாநாடு நடைபெறுவதை ஒட்டி சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

வக்பு திருத்தச் சட்டம் அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது பள்ளிவாசல்கள், தர்காக்கள், மத்ரசாக்கள் சொத்துக்களை சூறையாடும் நோக்கில் இயற்றப்பட்டதையும்
உலகிலேயே அதிக முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் முதன்மையான நாடாக இந்தியா விளங்குகிறது.

ஆனால் இந்திய நாடாளுமன்றத்திலும் பல்வேறு மாநில சட்டமன்றங்களிலும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறைந்து கொண்டே செல்கிறது இதன் பின்னணியில் திட்டமிட்ட தீய சூழ்ச்சிகளும்  இயங்கிவருகின்றன.

தமிழ்நாடு சட்டமன்றம் உட்பட பல்வேறு சட்டமன்றங்களில்உள்ள முஸ்லிம் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை முஸ்லிம்களின் மக்கள் தொகையை பிரதிநிதித்துவப் படுத்தும் நிலையில் இல்லை என்பதையும்சந்திப்பு நிகழ்வில் கருத்துரைகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் தேனி மாவட்ட ஐக்கிய ஜமாத் தலைவர் பொன்ராஜ் கொந்தாளம்,மாநிலத் துணைத் தலைவர் ஜமா அப்துல் உலமா அலாவுதீன் மிஸ்பாதி,மற்றும் ஜே ஏ எம் இறப்பியல் கல்லூரி முதல்வர் முகமது ஹீஸைன் மன்பா,ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மனித நேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் தமிழ்நாடு நாட் கமிட்டி தலைவர் தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது கலந்து கொண்டுசிறப்புரை ஆற்றினார்.

தொடர்ந்து சந்திப் நிகழ்வில் ஜமாத்தின் நிர்வாகிகள் மற்றும் உலாமாக்கள் ஏராளமான ஒரு கலந்து கொண்டு சிறப்பித்தனர்......


பேட்டி: அப்துல் சமது , சட்டமன்ற உறுப்பினர்
Previous Post Next Post