பாமக ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம்
அன்புமணி ராமதாஸ் பங்கேற்பு
ராணிப்பேட்டை ஜூன் 17:- பாட்டாளி மக்கள் கட்சியின் ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம்
ராணிப்பேட்டை பாலாற்றங்கரை அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது
இப்பொதுகுழு கூட்டத்திற்கு ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்பி.சண்முகம் தலைமை தாங்கினார்
கிழக்கு மாவட்ட செயலாளர்
க. சரவணன் அனைவரையும் வரவேற்று பேசினார் மாவட்ட வன்னியர் சங்க தலைவர் ஏஆர்.லட்சுமணன், மாவட்ட துணை செயலாளர்கள் கதிர்வேலன், சுகுமார், பூண்டி மோகன், ஏழுமலை, மாவட்ட துணைத் தலைவர்கள் காசிநாதன், விபி மணி, எஸ் கஜேந்திரன், எம்.சாரதி,
எஸ்.பெருமாள், ஆகியோர் முன்னிலை வகித்தனர்
இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார் அவர் பேசும்போது பாட்டாளி மக்கள் கட்சி சமூக நீதி, சமத்துவம், ஜனநாயகம் கொள்கை அடிப்படையில் இயங்கிக் கொண்டிருக்கிற கட்சி மக்களுக்கான உரிமைகளை காப்பாற்ற நாம் பாடுபட வேண்டும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு கிளைகளிலும் 10 பேர் கொண்ட பூத் முகவர்களை நியமனம் செய்து கட்சி பலப்படுத்த கேட்டுக்கொண்டார் முதல்வர் மு க.ஸ்டாலின் வன்னிய மக்களுக்கு இட ஒதுக்கீடு செய்து தருவதாக சொல்லி நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் ராணிப்பேட்டை தொகுதிக்கு எம்எல்ஏவாகவும்,அமைச்சராகவும் இருக்கிற ஆர்.காந்தி குரோமியம் கழிவு அகற்றுவதற்கும், பாலாற்றில் கழிவுநீர் கலப்பதையும் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமல் மக்கள் மீது அக்கறை இல்லாமல் இருக்கிறார் என்று குற்றம் சாட்டினார்
வருகின்ற ஜூலை 25 ஆம் தேதி மருத்துவர் அய்யா ராமதாஸ் பிறந்தநாளில் பத்து கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொள்ளப் போவதாகவும் இதில் அனைவரும் பங்கேற்று ஒத்துழைப்பு தர கேட்டுக் கொண்டார் இந்நிகழ்வில் முக்கிய பொறுப்பாளர்களான
கே எல்.இளவழகன், கே பொன்மலை, ஷேக்முகைதீன், என் சுப்பிரமணி, எம் சம்பத், எம் கே முரளி, அம.கிருஷ்ணன், முன்னாள் மாவட்ட செயலாளர் சரவணன், ஜானகிராமன், ராதாகிருஷ்ணன், உமாமகேஸ்வரி உள்ளிட்ட மாநில,மாவட்ட,ஒன்றிய, நகர, கிளைக் கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.