மத்தூர் பகுதியில் சாலை ஓரங்களில் கடைகள் ஆக்கிரிமிப்புஅகற்ற பொதுமக்கள் வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு.

மத்தூர் பகுதியில் சாலை ஓரங்களில் கடைகள் ஆக்கிரிமிப்புஅகற்ற பொதுமக்கள் வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு.


 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூர் பகுதி மிக முக்கிய பகுதியாகும்  இந்த பகுதி வழியாக பேருந்துகள் பெங்களூருவில் இருந்து மத்தூர் வழியாக பண்டிச்சேரி, ஒகேனக்கல் இருந்து சென்னை, உள்ளிட்ட பல மாவட்டக்களுக்கு இந்த மத்தூர் பகுதிகளுக்கு வந்து பேருந்துகள் மத்தூர் 3 வழி சாலையில் பிரிந்து சென்று வருகின்றன. இந்த நிலையில் திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட சாலைகளில்  இருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலை ஊத்தங்கரை செல்லும் சாலை ஆகிய சாலை ஊரங்களில் பூக்கடை, உணவகங்கள், பொரிகடை, குகூல்டிங்ஸ் கடைகள்  உள்ளிட்ட பல தாரபட்ட கடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் பேருந்துகள் சென்று வர ஓட்டுநர்கள் சிரமபட்டு வருகின்றனர். மேலும் பேருந்துக்காக நிற்கும் இடம் இல்லாமல் அவதிப்படுகின்றனர் எனவே சம்மந்த பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ள  3 வழிகளில் ஆக்கிரிமித்துள்ள கடைகளை அகற்றி சாலையை விரிவுபடுத்தி முறையான சிக்னல் அமைக்கப்பட வேண்டும். பேருந்துகள் சிறமமின்றி செல்வதற்கு வசதி செய்து தரவேண்டும் என்று  வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது.
Previous Post Next Post