ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் வரதராஜ பெருமாள் கோயில் தெரு கருமாரியம்மன் கோயிலில் இந்து மக்கள் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வேலூர் கோட்டத் தலைவர் எஸ் கே மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் எம் இளங்கோ முன்னிலை வகித்தார். ஆற்காடு நகர பொதுச்செயலாளர் கார்த்தி, நகரத் தலைவர் சீனிவாசன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்

இந்து மக்கள் கட்சி  மாவட்ட செயற்குழு கூட்டம்


ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் வரதராஜ பெருமாள் கோயில் தெரு கருமாரியம்மன் கோயிலில்  இந்து மக்கள் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வேலூர் கோட்டத் தலைவர் எஸ் கே மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் எம் இளங்கோ முன்னிலை வகித்தார்.  ஆற்காடு நகர பொதுச்செயலாளர் கார்த்தி,  நகரத் தலைவர் சீனிவாசன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர் 
 இதில் சிறப்பு அழைப்பாளராக சமூக ஊடகப் பிரிவு மாநில தலைவர்  கண்ணன் மாவட்ட செயற்குழுவில் கலந்து கொண்டு கட்சியில் புதிய பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார் மேலும்  இச்செயற்குழு கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் சரவணன், ஆன்மீகப் பிரிவு மாவட்ட தலைவர் ஸ்ரீதர், இளைஞர் அணி மாவட்ட தலைவர் அஜித், சமூக ஊடகப்பிரிவு கார்த்தி, ஆற்காடு நகர பொறுப்பாளர் குமார், வாலாஜா நகர ஒன்றிய பொறுப்பாளர்கள், கட்சி நிர்வாகிகள், மகளிர் அணி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நகர செயலாளர்  மணிகண்டன் நன்றி கூறினார்.
Previous Post Next Post