கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே 4 யூனிட் மணல் கடத்திய கனரக இயந்திரம் (HITACHI), டிப்பர் லாரி பறிமுதல்
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள எம்.நடுபட்டு ஆற்றில் அரசு அனுமதி இன்றி மணல் கடத்துவதாக மத்தூர் போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி தலைமையில் போலீசார் மற்றும் தனிபடை போலீசார் இன்று அதிகாலை அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, நடுப்பட்டு துலாநிதி ஆற்றில் கனரக இயந்திரம் (HITACHI) மூலம் டிப்பர் லாரியில் 4 யூனிட் மணல் கடத்துவது தெரியவந்தது. இதில் மணல் கடத்திய திருப்பத்தூர் மாவட்டம் காக்கங்கரை பகுதியைச் சேர்ந்த வினோத் வயசு (30) டிப்பர் லாரியின் உரிமையாளர் மற்றும் டிரைவரான இவர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதனையடுத்து போலீசார் மண…
சகாதேவன் போச்சம்பள்ளி கிருஷ்ணகிரி மாவட்டம்