மணிகண்டம் ஒன்றியத்தில் 12 இடங்களில் மே தின கொடியேற்று விழா கட்சி, கட்டட சங்கம், ஆட்டோ சங்கம், உள்ளாட்சி சங்கம், தரைக்கடை சங்கம், சார்பில் 12 இடங்களில் கொடியேற்று விழா நடைபெற்றது
மணிகண்டம் ஒன்றிய தலைமை அலுவலகத்தில் தோழர் S. முத்தழகு தலைமையில் கட்டட சங்க மாவட்ட செயலாளர் தோழர் C. செல்வகுமார் அவர்கள் கட்ட சங்க கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார்
வாசன் சிட்டி ஆட்டோ ஸ்டாண்டில் தலைவர் தோழர் ஆறுமுகம் தலைமையிலும் பஞ்சாயத்து அலுவலகம் ஆட்டோ ஸ்டாண்ட் தலைவர் தோழர் சுரேஷ் தலைமையிலும் ஆட்டோ சங்கம் சார்பில் ஏஐடியுசி கொடியினை ஆட்டோ சங்க மாவட்ட துணை தலைவர் தோழர் MR. முருகன் அவர்கள் ஏற்றி வைத்து உரையாற்றினார்
இரட்டைவாயிக்காலில் தோழர் K. மேகராஜ் தலைமையில் தரைக்கடை சங்கம் கொடியினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய துணை செயலாளர் தோழர் S. முத்தழகு ஏற்றி வைத்தார்
தாயனூரில் தோழியர்S. லெட்சுமிபிரபா தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மணிகண்ட ஒன்றிய பொருளாளர் தோழர் KN. ஜெகநாதன் கட்டட சங்க கொடியினை ஏற்றி வைத்தார்
சோமரசம்பேட்டை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் தோழியர் J. நதியா தலைமையில் உள்ளாட்சி சங்க கொடியினை பெண்கள் சங்க மாநில துணை ஒருங்கிணைப்பாளர் தோழியர் M. மருதாம்பாள் ஏற்றி வைத்தார்
அல்லித்துறை அண்ணா சிலை அருகில் மாவட்ட துணைத் தலைவர் தோழியர்
S. முத்துலெட்சுமி தலைமையில் கட்டட சங்க கொடியினை மதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் தோழர் அண்ணாதுரை ஏற்றி வைத்தார்
சோமரசம்பேட்டை பெரியார் சிலை அருகில் தோழியர் M. சகுந்தலா தலைமையில் கட்சி கொடியிணை ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் தோழியர் M. ரஜியாபேகம் ஏற்றி வைத்தார்
நாடார்சத்திரத்தில் தோழியர் A. விஜயா தலைமையில் கட்டட சங்க கொடியினை மாதர் சங்க ஒன்றிய செயலாளர் தோழியர் B. வித்யா ஏற்றி வைத்தார்
பாரதிநகரில் தோழர் P. குமரேசன் தலைமையில் கட்டட சங்க கொடியினை ஒன்றிய துணை தலைவர் தோழர் N. பாஸ்கரன் ஏற்றி வைத்தார்
சபரிநகரில் தோழர் KN. ஜெகநாதன் தலைமையில் கட்சிக்கொடியினை தரைகடை ஒன்றிய செயலாளர் தோழர் K. மேகராஜ் ஏற்றி வைத்தார்
நாச்சிகுறிச்சியில் தோழியர் B. வித்யா தலைமையில் கட்சிக்கொடியை இளைஞர் மன்ற நிர்வாக குழு உறுப்பினர் தோழர் T. விஸ்வநாத் ஏற்றி வைத்தார்
நிகழ்ச்சியில் மதிமுக ஒன்றிய பொருளாளர் ஜெகதீஸ்வரன் மற்றும் அலங்காரதாஸ் சத்திரப்பட்டி ஜெகதீஸ்வரன், சின்னையன், ஹேமலதா, வியாகுல மேரி ,ஜான்சிராணி, லெட்சுமி, மீனாட்சி, இன்னசென்ட்விமலா மேரி, பாப்பாத்தி, ஜெயபால், பிரேமா ,அருணாதேவி, உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்