மீண்டும் பிரதமர் மோடி ஆட்சி தொடர்ந்தால் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் வகுத்தலித்த அரசியலமைப்புச் சட்டத்திற்கு பேர் ஆபத்து
அதை தூக்கி எறிந்து விடுவார்கள் என திண்டிவனத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை ரவிக்குமாருக்கு வாக்கு சேகரித்த அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பேச்சு.
திண்டிவனம்.
விழுப்புரம் வடக்கு மாவட்டம் விழுப்புரம் நாடாளுமன்றம் ( தனி) தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் துரை ரவிக்குமாரை ஆதரித்து திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று இரவு பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
திண்டிவனம் தொகுதிக்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் சால்வை அணிவித்து வரவேற்றார்.
தொடர்ந்து விடுதலை சிறுத்தை கட்சியின் வேட்பாளர் துரை ரவிக்குமாருக்கு பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பேசிய அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன்
தி.மு.க., தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சர் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு போட்டியிட இரண்டு தொகுதிகளை ஒதுக்கி போட்டியிட்டு வெற்றி பெற்று தேர்தல் அங்கீகாரம் பெற வேண்டும் என வாழ்த்தி அனுப்பியுள்ளார்.
அந்த வகையில் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் துரை ரவிக்குமார் கடந்த முறையை விட இந்த முறை மூன்று மடங்கு வித்தியாசத்தில் சுமார் 4 1/2 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற வேண்டும் என தெரிவித்த தொல் திருமாவளவன்
இந்தியாவில் உள்ள விவசாயிகள்,தொழிலாளர்கள், நெசவாளர்கள், சிறுகுறு தொழில் செய்பவர்கள் வேலைவாய்ப்பை இழந்து ஆபத்தில் உள்ளனர் .
ஜி.எஸ்.டி விதிப்பால் விலைவாசியை கட்டுப்படுத்தவில்லை கடந்த 10 ஆண்டுகளில் 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என தெரிவித்த மோடி அவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கவில்லை வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான கருப்பு பணத்தை மீட்டு இந்தியாவில் உள்ள ஏழை மக்களின் வங்கிக் கணக்கில் செலுத்துவேன் என்று சொன்னார் மோடி செய்யவில்லை.
ஆனால் இந்தியாவில் வளர்ச்சி அடைந்தவர்கள் இரண்டு பேர் அதானி அம்பானி,
அயல் நாட்டுகளில் போதை மாத்திரைகளை கப்பல்கள், விமானங்கள் மூலமாகவும் இந்தியாவில் இறக்கி போதை பொருட்களை கிராமப் பகுதியில் கொண்டு சென்று இளைஞர்களிடம் விற்கப்படுகின்றன இளைஞர்களை போதைகளுக்கு அடிமையாகிய ஆட்சி பி.ஜே.பி ஆட்சி என குற்றம் சாட்டிய தொல் திருமாவளவன்
மீண்டும் மோடி ஆட்சி தொடர்ந்தால் புரட்சியாளர் டாக்டர்.அம்பேத்கர் வகுத்தலித்த அரசியலமைப்புச் சட்டத்திற்கு பேர் ஆபத்து என்றும் அதை தூக்கி எறிந்து விடுவார்கள் அதை நீர்த்துப்போக செய்வார்கள் என வேதனையுடன் தெரிவித்த தொல் திருமாவளவன் டாக்டர்.அம்பேத்கர் வகுத்தலித்த அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும் பாசிசத்தை ஒழித்து ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும்., தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
முன்னதாக சிறுபான்மையினர்
நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசுகையில்:
பாசிச பாஜக ஆட்சியை அப்புறப்படுத்த வாக்காளர்கள் அனைவரும் சபதம் ஏற்று பாஜக ஆட்சியை அப்புறப்படுத்த விழுப்புரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து வாக்காளர்களும் பானை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றும் ஜாதி மதம் இல்லாத கட்சி மத்தியில் ஆட்சி செய்ய வேண்டுமானால் பி.ஜே.பியை பொதுமக்கள் தூக்கி எறிய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில் தி.மு.க., மாவட்ட அவைத்தலைவர் டாக்டர்.சேகர், பொருளாளர் ரமணன்,
மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார்,
திண்டிவனம் நகர செயலாளர் கண்ணன்,
ஒன்றிய பெருந்தலைவர்கள் சொக்கலிங்கம்,தயாளன்,
துணை சேர்மன் பழனி,நகர துணை செயலாளர் கௌதமன்,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் திலீபன்,
மலைச்சாமி, தேர்தல் பொறுப்பாளர்கள் வி.சி.க., நிர்வாகிகள் தோழமைக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.