திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த கூத்தாநல்லூர் நகராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் குறித்து சிறப்பு முகாமில் மூன்று நாட்களில் 800 மனுக்கள் பெறப்பட்டதாக நகர்மன்ற தலைவர் பாத்திமா பஷீரா தெரிவித்தார் .
தமிழ்நாட்டில் அரசின் சேவைகள் பொதுமக் களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திட வழிவகுக்கும் வகையில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் என்கிற புதிய திட் டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் தொடங்கி வைத்து இந்த மனுக்கள் மீது 30 நாட்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மக்களின் தேவைகளை நுணுக்கமாக கவனித்து, அதற்குரிய தீர்வுகளை வழங்குவதில் ஈடற்ற அரசாகத் திகழும் அரசின் வெற்றிப்பாதையில் மேலும் ஒரு மைல்கல்லாக மக்களுடன் முதல்வர் திட்டம் உருவாகி இருக்கிறது. இந்தநிலையில், திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சியில் கடந்த 3 நாட்களாக நடந்த மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாமில் 12 வார்டு களை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமாக கலந்து கொண்டு 800 மனுக்களை அளித்துள்ளதாக நகர்மன்ற தலைவர் பாத்திமா பஷீரா தெரிவித்தார். மனுக்களை பெற்றுக்கொண்ட பல்வேறு துறைகளைச்சேர்ந்த அதிகாரிகள் அவற்றை இணைய தளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.