மன்னார்குடி அருகே மோட்டார் பம்பில் குளிக்க சென்ற முதியவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மேலவாசல் கிராமம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் நாகராஜ் (48 ) அவரது மகன் குமார். இவர் தனது வீட்டின் அருகே உள்ள மோட்டார் பம்பு செட்டுக்கு குளிக்க சென்றுள்ளார். அப்பொழுது அவர் துணிகளை அருகில் இருந்த கம்பியில் காய வைத்தபோது. எதிர்பாராத விதமாக குமார் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நீண்ட நேரம் ஆகியும் குமார் வீடு திரும்பாததால்உறவினர்கள் தேடிய போது குமார் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது தெரியவந்தது தகவல்அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மன்னார்குடி போலீசார் குமார் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மன்னார்குடி அருகே குளிக்க சென்ற போது மின்சாரம்பாய்ந்து முதியவர் உயிரிழந்த சம்பவம் மேலவாசல் பகுதியில் பெரும் சோகத்தைஏற்படுத்தி உள்ளது.