கட்டிடத் தொழிலாளர் மாதாந்திர ஓய்வூதியம் 2000 ஆக உயர்த்தி உடனடியாக வழங்க வேண்டும். - கட்டடத் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் என்.செல்வராஜ் கோவையில் இருந்து அறிக்கை.
கோவை.
தமிழ்நாடு ஏ ஐ டி யு சி கட்டட தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் என் செல்வராஜ் கோவையிலிருந்து பத்திரிக்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் கட்டட தொழிலாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ஆயிரத்திலிருந்து உயர்த்தி 2000 ஆக வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அவரது அறிக்கை முழு விவரம்,
"தமிழ்நாடு ஏஐடியூசி கட்டடத் தொழிலாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்டோபர் 9, 10 தேதிகளில் சென்னை சிந்தாதிரிப்பேட்டை
ஏ ஐ டி யூ சி தலைமையகமான அமரர் கே.டி.கே. தங்கமணி இல்லத்தில் மாநில தலைவர் கே.இரவி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஏ ஐ டி யூ சி யின் தேசிய செயலாளர் தோழர் டி.எம்.மூர்த்தி அகில இந்திய முடிவுகள் பற்றியும் இன்றைய அரசியல் நிலவரங்கள் பற்றியும் விளக்க உரை ஆற்றினார். தமிழ்நாடு ஏ ஐ டி யூ சி யின் பொதுச் செயலாளர் எம். ராதாகிருஷ்ணன் வழி காட்டினார்.
சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் என். செல்வராஜ் அறிக்கை தாக்கல் செய்தார் பேசினார்.
கூட்டத்தில் துணைத் தலைவர்கள் ம
கோவை ஆர். பாலகிருஷ்ணன், கரூர் ஜி.பி.எஸ். வடிவாலன், திருச்சி கா.சுரேஷ், துணைப் பொதுச் செயலாளர் சேலம் எம். முனுசாமி, பொருளாளர் இரா. முருகன், செயலாளர்கள் எஸ். சின்னசாமி, ஆர்.தில்லைவனம், தூத்துக்குடி சேது, திண்டுக்கல் பாலன், அம்பத்தூர் ஆர் துரைசாமி, வேலூர் சங்கர் மேஸ்திரி.
மாவட்ட செயலாளர்கள். கோவை ஆர்.நாராயணன், அரியலூர் ஜீவா, ஈரோடு தெற்கு தலைவர் எம்.குணசேகரன், ஈரோடு வடக்கு எம்.கந்தசாமி, கரூர் பொருளாளர் காலராணி, கன்னியாகுமரி சுரேஷ், யேசு தாஸ், விருதுநகர் நடராஜன், கடலூர் துணைச் செயலாளர் எஸ்.அண்ணாமலை, நாமக்கல் ஏ.குமார், தர்மபுரி ஏ.சி. மணி, மதுரை மா.இருளாண்டி, திருப்பூர் கே.மூர்த்தி, விழுப்புரம் ஜெயமலர், கள்ளக்குறிச்சி ஏ.அருண், வடசென்னை ஏ.அருள், திருச்சி செல்வக்குமார், திருவண்ணாமலை எம்.எஸ். மாதேஸ்வரன், தென் சென்னை சி.சீனிவாசன், மயிலாடுதுறை ராமன், நீலகிரி எம்.குணசேகரன், துணைச்செயலாளர் ராஜா, காஞ்சிபுரம் தலைவர் மூர்த்தி, செயலாளருக்கு அருணா, துணை செயலாளர் வெங்கடேசன், செங்கல்பட்டு தலைவர் ஆதிமூலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கீழ்காணும் தீர்மானம் ஒருமனதாக எடுக்கப்பட்டது.
1) தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து 60 வயது நிறைவடைந்த தொழிலாளர்கள் ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. மாத ஓய்வூதியம் ஆயிரம் என்பது மூத்த தொழிலாளர்களுக்கு மருந்துகள் கூட போதவில்லை என்பதால் 6 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று ஏ ஐ டி யூ சி உள்ளிட்ட அனைத்து கட்டட தொழிலாளர் தொழிற்சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் நலவாரிய கூட்டம் நலவாரிய நிதி நிலையின் படி மாதம் மூன்றாயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கலாம் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது.
அரசு ஒப்புதல் வழங்காமல் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் என்பது வாரியத்தின் நிதிச் சுமையை அதிகரிக்கும் என்பதால் குறைத்து தீர்மானம் நிறைவேற்றி அனுப்புக என்று நிதித்துறை வழிகாட்டுதல் படி தமிழ்நாடு அரசு தீர்மானத்தை வாரியத்திற்கு திருப்பி அனுப்பி விட்டது. மீண்டும் வாரிய தலைவர் உறுப்பினர்கள் அனைவரும் முத்தரப்பு குழுவும் கூடி 2000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று நிதித்துறையின் பிரதிநிதி உள்ளிட்ட அனைவரும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு கடந்த மார்ச் 9ஆம் தேதி அனுப்பி வைத்தது.
தீர்மானம் அரசுக்கு கிடைக்கப்பெற்று ஆறு மாத காலத்தில் கடந்த அக்டோபர் ஆறாம் தேதி இருநூறு ரூபாய் மட்டும் உயர்த்தி 1200 ரூபாய் ஓய்வூதியம் வழங்கலாம் என்று அரசாணை வெளியிடப்பட்டது.
1200 ரூபாய் ஓய்வூதியம் என்பது ஏற்றுக் கொள்ள இயலாது என்பதை தமிழ்நாடு ஏ ஐ டி யூ சி கட்டடத் தொழிலாளர் சங்கம் ஒருமனதாக நிராகரிக்கிறது. 6000 ரூபாய் ஓய்வூதியம் கோரிக்கை முன்வைத்து அரசு அதிகாரிகளின் வழிகாட்டுதல் படி மூன்றாயிரம் ரூபாய் தீர்மானித்து, நிதித்துறையின் வேண்டுகோள் படி 2000 ரூபாய் என்று முடிவு செய்து நலவாரியம் தீர்மானித்து அரசு அனுப்பியதை நலவாரியத்தில் 5,000 கோடி ரூபாய் நிதி இருப்பில் இருக்கும் நிலையில், இருநூறு ரூபாய் மட்டும் உயர்த்தி அறிவித்திருப்பது ஏற்புடையதல்ல என்பதை தமிழ்நாடு ஏஐடியூசி கட்டடத் தொழிலாளர் சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.
எனவே, வாரிய முடிவின்படி 2,000 ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் வழங்கப்படுவது போல் தமிழ்நாட்டில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் அனைவருக்கும் தீபாவளி பண்டிகை போனஸ் தொகையாக தலா ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும். என்பதை வலியுறுத்தி ஏ ஐ யூ சி யின் 104 ஆவது அமைப்பு தினமான அக்டோபர் 31ம் தேதி காலை தமிழ்நாடு முழுமையிலும் உள்ள கட்டுமான தொழிலாளர்களின் கிளைகளிலிருந்து வசிப்பிடங்களில் இருந்து மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு அஞ்சல் அட்டை கோரிக்கை அனுப்புதல் போராட்டம் நடத்துவது என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
மேலும் கடந்த மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் இருந்து கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாக மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு கட்டடத் தொழிலாளர் சங்கம் வாரிய முடிவுகளை அமலாக்க வேண்டும்.
வாரியம் துவக்கப்பட்ட போது ஒப்புக்கொண்டு நோக்கமாக வெளியிடப்பட்ட ஈ எஸ் ஐ மருத்துவ பலன்களை காப்பீடுகளை வழங்க வேண்டும். மகப்பேறு கால சட்டத்தின்படி ஆறு மாத காலம் ஊதியத்துடன் விடுப்பு பெண்களுக்கு வழங்க வேண்டும். பெண்களின் ஓய்வூதிய வயதை 55 என்று குறைக்க வேண்டும். ஓய்வூதியம் பெற்று வருகிற மூத்த தொழிலாளர்களின் மரணத்திற்கு இயற்கை மரண உதவித்தொகை ஈமச்சடங்கு உதவித்தொகை வழங்க வேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தார்கள். அரசு தலையிட்டு கொள்கை அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்பதற்காகவே ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் மாண்புமிகு முதல்வருக்கு அனுப்பப்பட்டது.
இம்மனுவின் மீது முதல்வரின் அலுவலர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் நலவாரியத்தின் தொழிலாளர் உதவி ஆணையர் மூலம் கோரிக்கைகள் அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது என்ற அடிப்படையில் கடிதம் எழுதி நிராகரிக்கப்பட்டதை இந்தக் கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு அனுப்பப்பட்ட விண்ணப்பத்தின் மீது தொழிலாளர்களின் கோரிக்கைகளை கனிவோடு பரிசீலனை செய்து அமுல்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்த கூட்டம் தமிழ்நாடு அரசை
கேட்டுக்கொள்கிறது". என்றும் கட்டட தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் என் செல்வராஜ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
MR முருகன் தமிழர் களம் ஸ்ரீரங்கம்