குறுவைக்கு காப்பீடு தேவை இல்லை என தமிழக அரசு தெரிவித்து விட்டதாக மத்திய அரசு மதுரை உயர்நீதிமன்றத்தில் அளித்துள்ள எழுத்துப்பூர் அறிக்கையில் தெரிவித்துள்ளது குறித்து முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும். என மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் பேட்டி

குறுவைக்கு காப்பீடு தேவை இல்லை என தமிழக அரசு தெரிவித்து விட்டதாக மத்திய அரசு மதுரை உயர்நீதிமன்றத்தில் அளித்துள்ள எழுத்துப்பூர் அறிக்கையில் தெரிவித்துள்ளது குறித்து முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும். என மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் பேட்டி 
திருவாரூர் மாவட்டம் மன்னாா்குடியில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தா் அப்போது காவிரி உரிமை மீட்பதற்காக 50 ஆண்டு காலம் போராடி காவிரி மேலாண்மை ஆணையம் பெறப்பட்டது. ஆணையத்திற்கான அதிகாரம் உச்ச நீதிமன்றத்தால் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது.கர்நாடகம் தண்ணீர் தர முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிகாரம் வரம்பு என்ன என்பதை கர்நாடகாவிற்கு தமிழகத்திற்கும் நீதிமன்றம் உணர்த்தி உள்ளது. தமிழ்நாட்டிற்கு விடுவிக்கும் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டிருந்தாலும் பற்றாக்குறை காலத்திலும் உரிய தண்ணீரை கொடுக்க வேண்டும் என்கிற உத்தரவாதத்தை ஆணையம் உறுதிப்படுத்தி உள்ளதை உச்சநீதிமன்றமும் ஏற்றுள்ளது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கிறோம். ஜூலை முதல் வாரத்திலேயே ஆணையத்தின் அவசரக் கூட்டத்தைக் கூட்டி சட்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு இருக்குமேயானால் குருவை கருகத் தொடங்கி இருக்காது. சம்பா சாகுபடி மேற்கொண்டிருக்க முடியும். காலம் கடந்து ஆகஸ்ட் மாதம் 2வது வாரம் வழக்கு தொடர முற்பட்டதால் நீதிமன்றமும் சில காலம் காலதாமதப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. காவிரி மேலாண்மை ஆணையத்தை அணுகி அவசரகால கூட்டத்தைக் கூட்டி ஜூலை மாதம் உரிய தண்ணீரை தென்மேற்கு பருவமழை பெய்து கொண்டிருக்கிற காலத்திலேயே பெற்றிருந்தால் கர்நாடகா விவசாயிகள் எதிர்ப்பில்லாமலேயே ஆகஸ்ட் மாதம் வரையிலான தண்ணீரை பெற்றிருக்க முடியும் முடியும். தற்போது சம்பா சாகுபடி துவங்க முடியாத முட்டுக்கட்டை ஏற்பட்டிருக்காது. காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தான் அதிகாரம் உள்ளது என்பதையும் உச்சநீதிமன்ற தீர்ப்பு மூலம் வெளிப்படுத்தியுள்ளது. இது விவசாயிகளுக்கு மிகப்பெரிய நம்பிக்கை உருவாக்கி உள்ளது. மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசின் தமிழ்நாட்டிற்கு விரோதமான துரோகம் அளிக்கும் நடவடிக்கைகள் நீதிமன்றத்தால் தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கிறது. தமிழ்நாடு அரசு இனியாவது உரிய முறையில் காவிரி மேலாண்மை ஆணையத்தை செயல்பட வைப்பதற்கான தொடர் முயற்சிகளை சட்டப்படி மேற்கொள்ள வேண்டும். அதில் எந்த இடைவெளியும் இல்லாத வகையில் அரசியல் தலையீடு இன்றி தமிழ்நாட்டிற்கு நீதி கிடைக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்திற்கு இணையான அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை பயன்படுத்த உரிய காலத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்த தீர்ப்பு உறுதிப்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டிற்கு குறுவை காப்பீட்டு திட்டத்தை தேவை இல்லை என்றும், பயிர் பாதிப்பு குறுவையில் ஏற்பட்டால் தமிழ்நாடு அரசே தனது நிதியிலிருந்து இழப்பீடு வழங்கி விவசாயிகளுக்கு ஈடு செய்வதாக மத்திய அரசுக்கு கடந்த ஜூன் மாதம் 6 ஆம் தேதி வீடியோ கான்பரன்ஸ் முறையில் தெரிவித்ததால் தமிழ்நாட்டிற்குமத்திய அரசால் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை தமிழ்நாடு அரசே வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் ஜீவகுமார் தொடர்ந்திருக்கிற மத்திய அரசுக்கு எதிரான காப்பீட்டு திட்டம் குறித்தான வழக்கில் மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு குருவை பாதித்திருக்கிற விவசாயிகளுக்கு முழு பொறுப்பேற்று இழப்பீடு வழங்க முன்வர வேண்டும் மத்திய அரசை காரணம் காட்டி தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு துரோகம் இழைப்பதை கைவிட வேண்டும்.இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் உரிய விளக்கம் அளிக்க முன் வர வேண்டும் என தெரிவித்தாா் 
Previous Post Next Post