18-08-2023
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டாரம், சிலுக்குவார்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சென்னஞ்செட்டிபட்டி கிராமம், புகையிலையில்லா கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, இப்பகுதி மாணவ,மாணவிகள், மற்றும் ஊர் பொதுமக்களுக்கு புகையிலை பொருட்களின் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு, மற்றும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் வட்டார மருத்துவ அலுவலர் மரு.K.S.வினோத்,எம்.பி.பி.எஸ், சிலுக்குவார்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி. செல்வி ஜெயசீலன், ஊராட்சி செயலர், திரு.கணேசன், அரசு கள்ளர் பள்ளி ஆசிரியர், உதவி வளர்ச்சி அலுவலர் திருமதி. தமிழரசி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திரு. வே.முருகேசன், சுகாதார ஆய்வாளர்கள் திரு. பாண்டி மாதவன், திரு. விஜயகுமார், திரு. சதீஸ்குமார், திரு. பொன்ராம், காவல்துறை சார்ந்த காவலர் திரு. கார்த்திக் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.