கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மன்னார்குடியில் ஓ.பி.எஸ். மற்றும் அமமுகவினர் இணைந்து கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மன்னார்குடியில் ஓ.பி.எஸ். மற்றும் அமமுகவினர் இணைந்து கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாட்டில் நடைபெற்ற கொலை ,கொள்ளை வழக்கை தமிழக அரசு விரைந்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அதைபோல் கொலை கொள்ளை வழக்கில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளுக்கு தமிழக அரசு உரிய தண்டனை பெற்று தர வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஓ.பி.எஸ் மற்றும் அமமுக சார்பில் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஓ.பி.எஸ் தரப்பு மற்றும் அமமுக சார்பில் 500க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்க வலியுறுத்தியும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகவும், கண்டன முழக்கங்கள் எழுப்பி கண்டன ஆாப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
Previous Post Next Post