என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுகவினர் உண்ணாவிரதம்
நெய்வேலி என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து புவனகிரியில் அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர் இதில் எம்எல்ஏக்கள் அருண்மொழி தேவன் பாண்டியன் கலந்து கொண்டனர் இந்த நிலையில் என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு மாற்ற இடம் வழங்க வேண்டும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசையும் கண்டித்து அதிமுக சார்பில் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழி தேவன் எம்எல்ஏ தலைமையில் புவனகிரியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது இதற்கு ஆதரவு தெரிவித்து கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏவும் போராட்டத்தை ஈடுபட்டார் இதில் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் மு.எம் எல் ஏ சுப்பிரமணியன் மாவட்ட பொருளாளர் சுந்தர் பேரவை செயலாளர் உமா மகேஸ்வரன் ஒன்றிய செயலாளர்கள் சீனிவாசன் சிவப்பிரகாசம் விநாயகமூர்த்தி ராசாங்கம் கூட்டுறவு வங்கி தலைவர் பரங்கிப்பேட்டை வசந்த் ஒன்றிய அவை தலைவர் ரங்கசாமி தலைமைக் கழக பேச்சாளர் தில்லை கோபி புவனகிரி ஒன்றிய குழு துணை தலைவர் வாசுதேவன் புவனகிரி நகர செயலாளர் செல்வகுமார் உள்பட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர் இந்த போராட்டம் மாலை 5 மணிக்கு முடிவு அடைந்தது