மன்னார்குடியில் உணவகத்தில் மாமூல் கேட்டு தராததால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் உணவகத்தை அடித்து நொறுக்கி சூறையாடிய சிசிடி காட்சிகள் சமூக வலைதலங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வ.உ.சி சாலையில் உள்ள உணவகம் மருந்தகம் மளிகை கடை உள்ளிட்ட பகுதிகளில் மூன்று பேர் கொண்ட கும்பல் கடை உரிமையாளர்களிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரவு வ.உ.சி சாலையில் உள்ள சிங்கப்பூர் பரோட்டா கடை ஒன்றிற்கு வந்த மூன்று நபர்கள் கடைக்காரரிடம் ஆயிரம் ரூபாய் பணம் மாமுல் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் கடை விற்பனையாளருக்கும் வாலிபர்களுக்கும் இடையே வாக்கவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் உணவகத்தில் சாப்பிட வந்த நபர் ஒருவரை அரிவாளால் வெட்டியுள்ளார். மேலும் கடையில் இருந்த உணவு பொருட்கள், அரிவால் வைத்துக்கொண்டு பாத்திரங்களை கீலே தள்ளி உடைத்து பிரச்சினை செய்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மன்னார்குடி காவல்துறையினர் விசாரணை செய்து சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு பிரசாத் என்ற வாலிபரை கைது செய்தனர்.
பின்னார் காவலர்கள் கைது செய்து அழைத்து சென்ற பிரசாத் உள்ளிட்ட இருவரும் காவலர் பிடியிலிருந்து ஓடிவிட்டனர் தப்பி ஓடிய இருவரை மன்னார்குடி காவலர்கள் வலைவீசி தேடி வருகின்றனர்.
மாமுல் கேட்டு மர்மநபர்கள் உணவகத்தை அடித்து நொறுக்கும் சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.