இம்மாத இறுதியில் நிச்சயதார்தம் நடைபெற உள்ள நிலையில் தூக்குமாட்டி காவலர் தற்கொலை ஆன்லைனில் வாங்கிய கடன் தொல்லையா ? என காவல்துறையினர் விசாரணை .
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுக்கா காவல்நிலையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகாலமாக பணியாற்றி வருபவர் பிரவின்குமார்(30). இவர் நாகை மாவட்டம், வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர். இவர் தனது சொந்த ஊருக்கு செல்லுவதற்காக கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரு தினங்கள் விடுப்பு எடுத்து விடுமுறையில் சென்றுள்ளார். இத்தகைய சூழலில் இவர் தனது சொந்த ஊருக்கு செல்லாமல் மன்னார்குடியை அடுத்த சவளக்காரன் கிராமத்திற்கு அருகாமையில் உள்ள நளாநல்லூர் பகுதியில் உள்ள வயல்வெளியில் உள்ள மரத்தில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த மன்னார்குடி காவல்துறையினர் தற்கொலை செய்துகொண்ட செந்தில்குமார் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து உடற்கூறு பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டுவந்தனர். மேலும் காவலர் பிரவின்குமாருக்கு வரும் 28ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ள நிலையில் தற்கொலை செய்துகொண்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இந்நிலையில் செந்தில்குமார் தனது கைப்பேசியினை எப்போதும் ஆன்லைன் தொடர்பில் வைத்திருந்ததாக சக காவலர்கள் மூலமாக தெரியவந்ததின் பெயரில் பிரவின்குமார் ஆன்லைனில் வாங்கிய கடனை உரிய காலத்தில் கட்ட முடியாத காரணத்தினால் அந்த நிறுவனம் இவருக்கு பலவித தொல்லைகளை தொடர்ந்து கொடுத்துள்ளது இதில் மன உளச்சல் அடைந்த பிரவின்குமார் தற்கொலை முடிவுக்கு வந்திருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறையினர் அவரது கைப்பேசியினை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர் .