மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலின் தெப்ப திருவிழாவின் 4ம் நாள் நிகழ்ச்சியாக கருட சேவையில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலின் தெப்ப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலின் தெப்ப திருவிழாவின் 4ம் நாள் நிகழ்ச்சியாக கருட சேவையில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலின் தெப்ப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.

இதன் ஒவ்வொரு தினமும் இரவு சுவாமி வீதி உலா நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக 4ம் தினமான நேற்று இரவு தங்க கருட வாகனத்தில் பரமபதநாதன் அலங்காரத்தில் ராஜகோபால சுவாமி வீதி உலா வந்தார். ஹரித்ராநதி தெப்பக்குளத்தின் தென்கரையில் உள்ள மண்டபத்தில் ராஜகோபாலசாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது .
அதனை தொடர்ந்து தீட்சிதர்கள் வேத பாராயணம் பாடல்களை பாடினர். பின்னர் சுவாமி வீதி உலா நடத்தப்பட்டது. திரளான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர் .
Previous Post Next Post