மே30
ஆவணம்:1
தேனி மாவட்ட செய்தியாளர்: இரா.இராஜா
*ரேஷன் அரிசி கடத்தல் கும்பலுக்கு விற்பனை செய்தால் குடும்ப அட்டை பறிக்கப்படும்..*
*கம்பம் பகுதியில் இருந்து ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க இரு மாநில அதிகாரிகள் இணைந்து ஆலோசனை கூட்டம் நகராட்சியில் நடைபெற்றது.*
கம்பம் : ரேஷன் அரிசி கடத்தல் கும்பலுக்கு விற்பனை செய்தால் குடும்ப அட்டை பறிமுதல் செய்யப்படும் என வட்ட வழங்கல் அதிகாரி இந்துமதி உத்தரவு..
தேனி மாவட்டம் கம்பம் மற்றும் குமுளி வழியாக கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்கும் விதமாக இரு மாநில அதிகாரிகள் இணைந்து கம்பம் நகராட்சி கூட்டரங்கில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட வழங்கல் அதிகாரி இந்துமதி தலைமை வகித்தார்.உடன் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி பாலசுப்பிரமணி, இடுக்கி வருவாய் அலுவலர் ஸ்ரீகலா, பீர்மேடு கோட்ட துனைக் கண்காணிப்பாளர் கொரியன் குரூஸ் மற்றும் அதிகார்கள் கலந்துகொண்டனர்.
இதன் மூலம் மாதந்தோறும் டன் கணக்கில் ரேசன்அரிசி தமிழக கேரளா எல்லையை கடக்கிறது. இது முக்கியமாக தோட்டத் தொழிலாளர்களால் பயன்படுத்தப் படுகிறது. இவற்றை இடைத்தரகர்கள் தொழிலாளர்களுக்கு ரூ.30 முதல் ரூ.35 வரை விற்பனை செய்கின்றனர்.
மூணாறு, பூப்பாறை, வண்டிப்பெரியார், பீர்மேடு, ஏலப்பாறை, உடும்பஞ்சோலை பகுதிகளில் அரிசி வியாபாரம் பரவலாக நடக்கிறது. இந்நிலையில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஒரு கிலோ அரிசிக்கு, இடைத்தரகர்கள், 5 ரூபாய் முதல், 7 ரூபாய் வரை பெற்று வருவதாக, போலீசார் தகவல் தெரிவித்தனர்.
தமிழகத்தில் கடுமையான சட்டம், குடிமைப் பொருள் வழங்கல் பிரிவு, உணவுத் துறை சிறப்புப் பிரிவு ஆகியன இருந்தும், தேனி மாவட்டம் பகுதிகளில் இருந்து ரேசன் அரிசி கடத்தலைத் தடுக்க நடவடிக்கை இல்லை என புகார் எழுந்ததையடுத்து இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று உள்ளது.
மேலும் குமுளி சோதனைச் சாவடி வழியாக செயல்படும் காவல் துறை சோதனைச் சாவடிகளில் சோதனையை கடுமையாக்குவதுன் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை, தனிநபர் தகவல்கள், மொபைல் எண் உள்ளிட்டவை இரு மாநில அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். இரு மாநிலங்களிலும் உள்ள பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கூட்டாக எல்லைப் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்வதோடு
எல்லை தாண்டி வரும் அரிசி பாரம் குறித்த துல்லியமான விவரங்கள், விற்பனையாளர் மற்றும் வாங்குபவர்களின் தகவல்களைச் சேகரித்து அவற்றைச் சரி பார்த்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.