நீடாமங்கலம் அருகே திமுக வார்டு உறுப்பினரை தாக்கி கை எலும்பை உடைத்த திமுக ஒன்றிய கவுன்சிலரை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள கிராம மக்கள் வலியுறுத்தல்

ஒரே கட்சியை சேர்ந்த திமுக வார்டு உறுப்பினரை தாக்கி கை எலும்பை உடைத்த திமுக ஒன்றிய கவுன்சிலர் 


#நீடாமங்கலம் ஏப் :03

நீடாமங்கலம் அருகே திமுக வார்டு உறுப்பினரை தாக்கி கை எலும்பை உடைத்த திமுக ஒன்றிய கவுன்சிலரை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள கிராம மக்கள் வலியுறுத்தல்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நீடாமங்கலம் ஒன்றியம் புள்ளவராயன் குடிகாடு கிராமத்தை சேர்ந்த வார்டு உறுப்பினர் தங்கமணி, கிராம கமிட்டி பொறுப்பும் வகித்து வருகிறார். அதே கிராமத்தைச் சேர்ந்த திமுக கட்சியை சேர்ந்த மாதவன் கிராம கமிட்டி நாட்டாண்மையாக இருந்து வருகிறார், அவரது மனைவி அனிதா மாதவன் திமுக ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். இந்நிலையில் புள்ளவராயன்வராயன் குடிக்காடு சீனிவாசபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் முடிவடைந்த நிலையில் கிராம கமிட்டி வரவு செலவு கணக்கு முடிக்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது மாதவன் கிராம கமிட்டினருக்கு வரவு செலவு கணக்கை ஒப்படைக்காமல் இருந்ததாகவும், இதனால் மாதவன் கிராம கமிட்டி உறுப்பினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் கலைந்து சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வார்டு உறுப்பினர் தங்கமணி தனியாக சென்ற போது திமுக ஒன்றிய கவுன்சிலர் அனிதா மாதவன், அவரது மகன் மற்றும் பலர் தங்கமணியை வழி மறித்து கட்டை, கம்பி, ரீப்பர் கட்டைகளால் தாக்கியுள்ளனர் இதனால் தங்கமணியின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து தங்கமணி மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவீர சிகிச்சை பெற்று வருகின்றார். இதுகுறித்து நீடாமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வார்டு உறுப்பினர் தங்கமணியை தாக்கி கையை முறித்த திமுக ஒன்றிய கவுன்சிலர் அனிதா மாதவன் மற்றும் குற்றவாளிகளை போலீசார் கைது செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கோயில் வரவு செலவு கேட்டு திமுக நிர்வாகிகளிடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . 


செய்தியாளர் :
தருண்சுரேஷ்
செல் : 9791655612
Previous Post Next Post