சட்டமேதை அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு மன்னார்குடியில் பல்வேறு அரசியல் கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சட்டமாமேதை அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை தமிழ்நாட்டில் சமூகநீதி நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அம்பேத்கரின் 133 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட திமுக, அதிமுக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா் கொண்டாடி வருகின்றனர் அதன் ஓருபகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் டாக்டர் அம்பேத்கர் 133 வது பிறந்தநாளை முன்னிட்டு அம்பேத்கர் அறிவாலயத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு வழக்கறிஞர்கள், கம்யூனிஸ்ட் அதிமுக , ஆதிதிரவிடர் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை நிர்வாகிகள் பல்வேறு அரசியல் கட்சியினர், உள்ளிட்ட சமூக சேவை சங்கத்தினர் அண்ணல் அம்பேத்கர் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்