நரிக்குறவர்களுக்கு உள்ள எம்பிசி இட ஒதுக்கீடை்டை பழங்குடியினருக்கு 5 சதவிகிதத்தை ஒதுக்கி நடப்பு பட்ஜெட் தொடரிலேயே அறிவிப்பை வெளியிட வேண்டும் என மன்னார்குடியில் மாநில உயர்மட்டகுழு தலைவர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் .
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் தமிழ்நாடு (பழங்குடியினர்) காட்டு நாயக்கன் சமூக சீர்திருத்த சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இதில் தலைமையேற்ற அழகு.பரமசிவம் மாநில உயர்மட்டகுழு தலைவர் செய்தியளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் தமிழக அரசு பழங்குடியினருக்கு உள்ள 1 சதவிகித இட ஒதுக்கீட்டை 5 சதவிகிதமாக உயர்த்தி தரவேண்டும் . பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர் , குருவிக்காரர் என்கிற இடங்களை சேர்த்துள்ளதால் பழங்குடியினருக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்கிற அச்சத்தினால் நரிக்குறவர்களுக்கு உள்ள எம்பிசி இட ஒதுக்கீடை்டை பழங்குடியினருக்கு 5 சதவிகிதத்தை ஒதுக்கி நடப்பு பட்ஜெட் தொடரிலேயே அறிவிப்பை வெளியிட வேண்டும் . மாவட்ட , மாநில பழங்குடியினர் நலக்குழு நியமித்து தமிழக அரசு வழங்கும் நலத்திட்டங்கள் ஆன்லைன் ஜாதி சான்றுகள் வழங்கிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் . உறவினர் பெற்றோருக்கு ஜாதி சான்றிதல் இல்லாவிட்டாலும் உடன்பிறந்தவர்களுக்கும் , அத்தை , மாமாவிற்கு ஜாதி சான்றிதல் இருந்தால் பிள்ளைகளுக்கு ஜாதி சான்றிதல் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கவேண்டும் . ஆன்லைன் ஜாதி சான்றுகள் வழங்குவதில் உள்ள குறைபாடுகளை நீக்கி நேரடியாக மாநில ஆய்வாளர்களை கொண்டு விசாரித்து உடனடியாக ஜாதி சான்றுகள் வழங்கவேண்டும் என்றார் . இந்த பொதுக்குழு கூட்டதில் மாநில , மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர் .
பேட்டி
அழகு .பரமசிவம் பழங்குடியினர் மாநில உயர்மட்டகுழு தலைவர்