நாச்சிகுறிச்சி பஞ்சாயத்தில் இரண்டாவது நாள் கையெழுத்து இயக்கம்
*தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் நாச்சிகுறிச்சி அனைத்து கிளைகளின் சார்பில் நாச்சிகுறிச்சி பஞ்சாயத்தில் உள்ள முக்கிய பிரச்சனைகளாக உள்ள காவேரி குடிநீர் வடிகால் வசதி பழைய புதிய மின் கம்பங்கள் நடுத்தெருவில் பல ஆண்டுகளாக இருந்து வந்த படித்துறை பொது கழிவறை வசதி ஆரம்ப துணை சுகாதார நிலையம் மற்றும் நூலகம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து நாச்சிகுறிச்சி பொதுமக்களிடம் மாதர் சங்க மணிகண்டம் ஒன்றிய துணை செயலாளர் தோழியர் B வித்யா தலைமையில் இரண்டாவது நாள் கையெழுத்து இயக்கம் 22.2.2023 இன்று மாலை 5.25 மணி அளவில் நடைபெற்றது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மணிகண்டம் ஒன்றிய துணை செயலாளர் தோழர் S முத்தழகு அவர்கள் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார் தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் திருச்சி மாவட்ட தலைவர் தோழர் MR முருகன் அவர்களும் பெண்கள் கட்டட சங்க மாநில துணை ஒருங்கிணைப்பாளர் தோழியர் M மருதம்பாள் கட்டட சங்க தேசிய குழு உறுப்பினர் தோழியர் D நிர்மலா தரைக்கடை சங்க மாவட்ட துணை தலைவர் தோழர் K மேகராஜ் கட்டட சங்க முன்னாள் மாவட்ட நிர்வாகி தோழியர் M பாத்திமா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாச்சிகுறிச்சி 2வது கிளை செயலாளர் தோழியர் ஜான்சிராணி மாதர் சங்க ஒன்றிய துணைத் தலைவர் தோழியர் விசாலாட்சி நாச்சிகுறிச்சி மாதர் சங்க செயலாளர் தோழியர் வியாகுலமேரி மற்றும் செல்வம் மகாலெட்சுமி சக்தி விஜயா நட்டாத்தி சாந்தி நாகரத்தினம் பாப்பாத்தி கமலம் இந்திராணி அமுதா உள்ளிட்ட பல்வேறு தோழர்கள் கலந்து கொண்டு இன்று இரண்டாவது நாளாக நாச்சிகுறிச்சி நடுத்தெரு பகுதியில் உள்ள பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது*