வேண்டுதல் நிறைவேற்றும் புனித செபஸ்தியார் ஆலயம். கொள்ள நோய்கள் வராமல் காத்துக் கொள்ள வேண்டி சிறப்பு பிரார்த்தனை......

வேண்டுதல் நிறைவேற்றும் புனித செபஸ்தியார் ஆலயம். கொள்ள நோய்கள் வராமல் காத்துக் கொள்ள வேண்டி சிறப்பு பிரார்த்தனை......

ஜன-20 
ஆவணம்:1
தேனி மாவட்ட செய்தியாளர்: இரா.இராஜா.


தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்த அனுமந்தன்பட்டியில் செபஸ்தியார் குடில் அமைந்துள்ளது. நேற்று மாலை செபஸ்தியார் கோவில் கொடியேற்றத்துடன் சப்பரபாணி விழா நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்களும் இந்து மக்களும் மதம் பாராமல் அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து மாலை திருப்பலி நடைபெற்றது இன்று காலை முதலே செபஸ்தியார் திடலில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது . இதில் ஜாதி மதம் என பாராமல் அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டனர் கொள்ளை நோய்கள் எதுவும் வராமல் காத்துக் கொள்ள வேண்டி இந்த அன்னதான விழா நடத்துவதாக செபஸ்தியார் குடில் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர் செபஸ்தியார் குடில் சுற்றி வசிப்பவர்கள் கூறுகையில் பழமையான இக் குடிலில் என்ன நினைத்து வேண்டினாலும் அனைத்தும் நடத்திக் கொடுப்பார்  புனித செபஸ்தியார் அண்டை மாநிலம் கேரளாவில் இருந்தும் அனேக பொதுமக்களும் கிறிஸ்தவர்களும் வந்து வேண்டுதல்கள் நிறைவேற்றி செல்வதாக கூறினார்.
Previous Post Next Post