புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் குடிநீரில் மனித கழிவை கொட்டியதைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நாடுதழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்.!!
ஜன-19
ஆவணம்: 1
தேனி மாவட்ட செய்தியாளர்: இரா.இராஜா
தேனி மாவட்டம் தேனி நகரில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் குடிநீரில் மனித கழிவை கொட்டிய இழி செயலை கண்டித்தும் இழிவினும் இழிவான குற்ற செயலில் ஈடுபட்ட நபர்களைக் கைது செய்ய வலியுறுத்தியும் தேனி நகரில் தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் நாகரத்தினம் தலைமையிலும் தேனி மேற்கு மாவட்ட செயலாளர் சுருளி அவர்கள் முன்னிலையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கண்டன உரை நிகழ்த்த வழக்கறிஞர் வில்லவன் கோதை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் குடிநீரில் மனித கழிவை கொட்டிய மனித மிருகங்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கோரியும் தமிழகம் முழுவதும் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டுவரும் ஜாதிவெறியர்களை காவல்துறை கைது செய்ய வேண்டும் மாறாக அரசு அதிகாரிகள் ஜாதிய வாதிகளுக்கு துணை போகும் நிலையினை புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் நடைபெற்றுவரும் பிரச்சினை சான்றாக உள்ளது என அனைத்து பொறுப்பாளர்களும் கண்டன உரை நிகழ்த்தினர் மற்றும் ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கிழக்கு மேற்கு ஒருங்கிணைந்த விசிகவினர் ஒன்றிய நகர பேரூர் முகாம் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்