தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா கம்பம் மாநகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.!!
ஜன-20
ஆவணம்:2
தேனி மாவட்ட செய்தியாளர்: இரா.இராஜா.
கம்பம் வ,உ,சி திடலில் காங்கிரஸ் கட்சியினர் தமிழக மக்களுக்கு எதிராக செயல்படும் தமிழக ஆளுனரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் தமிழக உரையை ஆளுனர் வாசிப்பது மரபு எனவும் இந்த உரையை வாசிக்க மறுத்ததாகவும் இதனால் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாகவும் இந்த ஆர்ப்பாட்டத்தை தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கம்பம் நகர தலைவர் போஸ் தலைமை வகித்தார் ராஜா முகமது வட்டாரத் தலைவர் முன்னிலை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக எம்பி முருகேசன் கலந்து கொண்டார் பேச்சாளர் பாரதன் உத்தமபாளையம் வட்டார தலைவர் சத்தியமூர்த்தி வழக்கறிஞர் சின்னமனூர் வட்டார தலைவர் ஜீவா கூடலூர் வட்டாரத் தலைவர் ஜெயபிரகாஷ் பாளையம் முபாரக் அலி சிவமணி மற்றும் பாஸ்கர் மணி மாயி உள்ளிட்டோர் மற்றும் காங்கிரஸ் மகளிர் கட்சி மாவட்ட நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டமும் ஆளுனருக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.