நலதிட்ட உதவிகளுக்கு மூடுவிழா நடத்திய திமுக அரசு- கையாலகாத ஸ்டாலின் என்று முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் பேச்சு
தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 106 வது பிறந்த நாள் விழா பொதுகூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினர் கே.பி அன்பழகன் பேசும்போது நிர்வாக திறமையற்ற, ஆட்சி செய்ய கையாலாகத முதல்வர் தான் மு.க.ஸ்டாலின் என்றும்,
பாலக்கோட்டில் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட மகப்பேறு மருத்துவமனைக்கு டாக்டர்களை நியமிக்க திராணி உண்டா, எதிர்கட்சியாக திமுக இருந்தபோது ஒருநிலைபாடும் ,ஆளும் கட்சியாக வந்த பிறகு வேறு நிலைபாடும் கொண்டுள்ளது.அதிமுக கொண்டு வந்த எண்ணற்ற நலதிட்டங்களுக்கு மூடு விழா செய்து வருகிறது.
திமுக 20-மாத கால ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது இவ்வாறு ஆவேசமாக பேசினார்.இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார்,முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், காரிமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ்,கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.