மன்னார்குடி அருகே முன்விரோதம் காரணமாக விவசாய கூலி தொழிலாளி வெட்டி படுகொலை சம்பவம் குறித்து பரவாக்கோட்டை போலிசார் விசாரணை
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மேலத்திருப்பாலக்குடி கிராமத்தை சேர்ந்தவர் விவசாய கூலி தொழிலாளி சுவேந்திரன் மனைவி கவிதா ஆகியோர்க்கு இரண்டு பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை உட்பட மூன்று குழந்தைகள் உள்ளனர் . இந்த நிலையில் சுவேந்திரன் அதே பகுதியில் உள்ள சக்கரவர்த்தி என்பவரிடம் கடந்த 20 வருடமாக விவசாய கூலி வேலை பார்த்து வந்தாக கூறப்படுகிறது . அப்போது இருவருக்கும் ஒரு சில பிரச்சனைகள் காரணமாக மோதல் ஏற்பட்டு வந்ததாகவும் சக்கரவர்த்தி சுவேந்திரனை அடித்துள்ளதாகவும் இருவரும் சமரசம் பேசி இனி சுவேந்திரன் எனக்கு விவசாய வேலைக்கு வரக்கூடாது என கூறியிருந்தார் . இந்நிலையில் சுவேந்திரன் குடும்ப சுழல் காரணமாக கடன் வாங்கியுள்ளார் இதில் கடன் வாங்கிய தொகை அதிகமானதால் மன்னார்குடி அருகே சுந்தரக்கோட்டை கிராமத்தில் உள்ள ஒருவர் வீட்டில் குடும்பத்துடன் விவசாய கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார் . இந்த நிலையில் புத்தாண்டு என்பதால் சொந்த கிராமத்திற்கு சென்ற சுவேந்திரன் மறைந்த அப்பாவின் திருவுருவ படத்திற்கு மாலை போட்டு சாமி கும்பிட்டுவிட்டு கட்டிலில் படுத்து உறங்கிய சுவேந்திரனை சக்கரவர்த்தி எழுப்பி சரமாரியாக வெட்டியுள்ளார் . இதில் பலத்த காயமடைந்து சுவேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தனது கணவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்த மனைவி கவிதா மற்றும் மூன்று குழந்தைகளும் கதறி அழுதனர் . முன்விரோதம் காரணமாக கூலி தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சம்பவம் குறித்து பரவாக்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளி சக்கரவர்த்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்விரோதம் காரணமாகத் விவசாய கூலி தொழிலாளியை புத்தாண்டு பிறந்த நாளில் வெட்டி கொலை செய்த சம்பவம் மேலத்திருப்பாலக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது .