மதுரை மாவட்டத்தில் உள்ள பாண்டி பஜார் முன்பு, ஐக்கிய விவசாயிகள் முன்னணி (எஸ்.கே.எம்) - மதுரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் விவசாயிகள் போராடி மத்திய அரசு ஏற்றுக் கொண்ட எட்டு அம்ச கோரிக்கையை நிறைவேற்ற கோரி பாராளுமன்ற உறுப்பினர் மூலம் மனு அளிக்கும் போராட்டம் நடத்தினர். மேலும், பாண்டி பஜாரிலிருந்து பேரணியாக அணிவகுத்து மங்கம்மாள் சத்திரத்தில் உள்ள அலுவலகம் வரை சென்று, நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேஷனிடம் விவசாயிகளின் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். இதில், எஸ்.கே.எம் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் ஏ.ஐ.கே.எஸ் மாவட்டச் செயலாளருமான சந்தனம், சி.பி.எம் விவசாய மாவட்ட செயலாளர் இளங்கோவன், இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மாவட்டச் செயலாளர் நாகஜோதி, ஏ.ஐ.கே.எஸ் மாவட்ட தலைவர் ரவிவர்மா, விவசாயிகள் மாவட்ட குழு உறுப்பினர்கள் அழகம்மாள், பாலு, பிச்சை, மகாலிங்கம், பாண்டிச்செல்வி, நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள பாண்டி பஜார் முன்பு, ஐக்கிய விவசாயிகள் முன்னணி (எஸ்.கே.எம்) - மதுரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் விவசாயிகள் போராடி மத்திய அரசு ஏற்றுக் கொண்ட எட்டு அம்ச கோரிக்கையை நிறைவேற்ற கோரி பாராளுமன்ற உறுப்பினர் மூலம் மனு அளிக்கும் போராட்டம்
தமிழர் களம் மாத இதழ்
0