தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி மலைமேல் கைலாசநாதர் ஆலயத்தில் தங்கமகன் ஓ .பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார்
தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான கைலாசபட்டி மலைமேல் கைலாசநாதர் திருக்கோவில் முன்னாள் முதலமைச்சரும் அனைத்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஒருங்கிணைப்பாளருமான தங்கமகன்
ஓ. பன்னீர்செல்வம் அவர்களுடைய பெரும் முயற்சியால் ராஜகோபுரம் மற்றும் கைலாசநாதர் கோவிலை சுற்றிராஜ கிரிவலம் சுற்றிவர சாலை வசதி சிறப்பாக செய்து புணரமைக்கப்பட்டது.
இந்த ஆலயத்தில் வருடம் தோறும் திருவண்ணாமலை திருக்கோவிலுக்கு அடுத்தபடியாக ஒவ்வொரு கார்த்திகை நாள்அன்று மகர விளக்கு ஏற்றி சிறப்பிப்பது வழக்கம் அப்பொழுது தேனி மாவட்டத்தில் இருந்து பல்லாயிரக்கனக்கான பக்தர்கள் சரசரையாக வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள்
மலைமேல் கைலாசநாதர் ஆலயத்திற்கு சாமி தரிசனம் செய்யவரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு உணவு தண்ணீர் மற்றும் பேருந்து வசதி ஆகியவற்றை மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் தங்கமகன்
ஓ. பன்னீர்செல்வத்தின் உத்தரவின் படி அன்பர் பணி செய்யும் குழுவின் தலைவர் ஆன்மீகச் செம்மல் ப.ஜெயாபிரதீப் செய்து வருவது வழக்கம்
இத்தகைய பெருமை வாய்ந்த கைலாசநாதர் திருக்கோவிலில் முன்னாள் முதலமைச்சரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளருமான தங்கமகன் ஓ. பன்னீர்செல்வம் இன்று சிறப்பு அபிஷேகம் செய்து சாமி தரிசனம் செய்தார் அப்பொழுது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார் .டாக்டர் முத்துகுமரன். மற்றும் அன்பர் பணி செய்யும் குழுவின் உறுப்பினர்கள் பலர் உடன் இருந்தார்கள்