யா.ஒத்தக்கடை பகுதியில் உள்ள ராஜபதி திருமண மண்டபத்தில், ஆற்றல் அறக்கட்டளை சார்பாக "உணர்வாய் உன்னை" வாழ்வியல் கலை மற்றும் உளவியல் மேம்பாட்டு இலவச பயிற்சி முகாம், நிறுவன இயக்குநர்கள் முனைவர் எம்.ஹுஸைன் பாஷா என்பவரால் அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மருத்துவர், ராஜபதி மருத்துவமனை நிறுவனரும், ராஜபதி திருமண மண்டபம் நிறுவனருமான மகுடபதி முன்னிலை வகித்தார், முனைவர் முத்துமணி சிறப்புரை ஆற்றினார். லேனா அழகப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் ஆற்றல் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் ரபிக்ராஜா, ராமமூர்த்தி, சதாம் உசேன், பாலமுருகன், தாகா, ராஜபாண்டி, சங்கர், தேவிகா, மணிகண்டன், சங்கர் கணேஷ், பொதுமக்கள், பெண்கள் மற்றும் மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.