காப்பீடு செய்த விவசாயிகளுக்கு நூறு சதவீதம் இழப்பீடை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் பிஆர்.பாண்டியன் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தல்..

பத்திரிக்கை ஊடக செய்தி அறிக்கை 
இடம்:மயிலாடுதுறை 
நாள்:17.11.2022

காப்பீடு செய்த விவசாயிகளுக்கு நூறு சதவீதம் இழப்பீடை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் 
பிஆர்.பாண்டியன் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தல்.. 
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் 
பிஆர்.பாண்டியன் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தரங்கம்பாடி ஒன்றிய பகுதிகளில் வரலாறு காணாத மழை பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விளைநிலங்களை பார்வையிட்டு விவசாயிகளை நேரில் சந்தித்து  சுற்றுப்பயணம் மேற்கொண்டார், இறுதியாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரை அவரது அலுவலகத்தில் சந்தித்து மயிலாடுதுறை மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.பேரிடர் மேலாண்மை திட்டத்தில் 2020-21 ஆம் ஆண்டு 
ஹெக்டேர் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக தமிழக அரசு வழங்கியது. தற்போது இடுபொருள் விலை உயர்வை கருத்தில் கொண்டு ஹெக்டேர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக பேரிடர் மேலாண்மை திட்டத்தில் உடன் வழங்கிட அவசரகால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

காப்பீடு திட்டத்தில் அறுவடை ஆய்வறிக்கையை காரணம் காட்டி காலங்கடத்தாமல் மாவட்ட ஆட்சியர் மேம்படுத்தப்பட்ட காப்பீடு திட்டத்தில் தனக்கு இருக்கிற அதிகாரத்தை பயன்படுத்தி பேரிடர் மேலாண்மை குழு மூலம் 100% பயிர் அழிவிற்கான இழப்பீடு பெறுவதற்கான நடவடிக்கையை உடன் துவங்கி உறுதிப்படுத்திட வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தோம்.இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்ததோடு பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றார்.

பயிர் காப்பீடு இழப்பீடு பெறுவது குறித்து உயர் அதிகாரிகளோடும்,துறை சார்ந்த அதிகாரிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்பதாக உத்தரவாதம் அளித்தார். தற்போதைய நிலையில் ஒரு வாரத்திற்கு மேலாக விளைநிலங்களில் கடல் போல் காட்சியளிப்பதால் தண்ணீரில் மூழ்கிய பயிர்கள் அழிந்து போய்விட்டது. கதிர் வரக்கூடிய நிலையிலும்,சூல் பருவத்திலும் உள்ள பயிர்கள் ஒட்டுமொத்தமாக அழுகி இருப்பதால் இதனை 100% பாதிப்பாக கருதி காப்பீட்டு நிறுவனம் மூலம் இழப்பீடு பெற வேண்டும்
என்பதை உறுதிப்பட தெரிவித்துள்ளோம்.

மேற்கண்டவாறு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் டி ஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார் 

மயிலாடுதுறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேட்டங்குடி சீனிவாசன், தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் கொள்ளிடம் விஸ்வநாதன், திருவாரூர் மாவட்ட செயலாளர் குடவாசல் சரவணன்,
கொள்ளிடம் ஒன்றிய தலைவர் மாதானம்முருகன், செயலாளர் ஆச்சாள்புரம் ஆனந்த்,மாவட்ட கவுரவத் தலைவர் சிவப்பிரகாசம் பிள்ளை, கண்ணன் ,தம்பு உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.

இவன் :
என்.மணிமாறன் செய்தி தொடர்பாளர்
Previous Post Next Post