கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் காவல் வட்ட ஆய்வாளர் சராக மேற்பார்வையில் இயங்கக்கூடிய சங்கராபுரம், வட பொன்பரப்பி, மூங்கில் துறைபட்டு ஆகிய காவல் நிலையங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் வருடாந்திர ஆய்வினை மேற்கொண்டு மரக்கன்றுகளை நட்டார் இதனைத் தொடர்ந்து நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார் இந்த ஆய்வின்போது திருக்கோவிலூர் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பழனி, சங்கராபுரம் காவல் வட்ட ஆய்வாளர் பாண்டியன், சங்கராபுரம் காவல் உதவி ஆய்வாளர் நரசிம்ம ஜோதி, வட பொன்பரப்பி காவல் உதவி ஆய்வாளர் மாணிக்கம், மூங்கில்துறைப்பட்டு காவல் உதவி ஆய்வாளர் உலகநாதன் மற்றும் காவல் நிலைய காவலர்கள் உடன் இருந்தனர்.